ஞாயிறு, 24 மார்ச், 2013

தாய்நாட்டின் நாளிதழ்கள் வாங்குவதை,,,


புதிய போப்பாக பொறுப்பேற்றுள்ள பிரான்சிஸ், தன் சொந்த நாடான அர்ஜென்டினாவில் இருந்து வெளியாகும் நாளிதழை வாங்க மறுத்து விட்டார்.இது குறித்து, அர்ஜென்டினாவில் உள்ள நாளிதழ் விற்பனையாளர், டேனியல் டெல் ரெக்னோ கூறியதாவது:புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கார்டினல்கள் கூட்டத்துக்காக, வாடிகனுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன், எங்களை தொடர்பு கொண்ட, ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ (போப் பிரான்சிஸ்), "தினமும் அர்ஜென்டினா நாட்டு நாளிதழை அனுப்ப வேண்டும்” என, கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இம்மாதம், 18ம் தேதி, என்னை தொலைபேசியில் அழைத்த அவர், "நாளிதழை அனுப்ப வேண்டாம்” என, கூறினார்.
நான் முதலில் நம்பவில்லை. அவரைப் போல வேறு யாரோ பேசுகிறார் என, நினைத்தேன்.ஆனால், "உண்மையாகவே, போப் பிரான்சிஸ் தான், ரோமிலிருந்து பேசுகிறேன்” என, அவர் கூறினார். இதை கேட்டதும், நான் அழுது விட்டேன். என்ன சொல்வது என, தெரியவில்லை.இவ்வாறு, டேனியல் கூறினார்.

புதன், 13 மார்ச், 2013

புதிய போப் தெரிவு செய்யப்பட்டார்,,,

உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட், முதுமை காரணமாக கடந்த 28-ந்தேதி தனது பதவியை துறந்து வாடிகன் நகரில் இருந்து வெளியேறினார்.
இதைதொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக, உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 115 கர்தினால்கள் வாடிகன் தேவாலாயத்தில் கூடி, போப் ஆண்டவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
வாக்கெடுப்பின் அடிப்படையில் நடந்த முதல் நாள் தேர்வு கூட்டத்தில் கர்தினால்களிடையே ஒரு முடிவு எட்டப்படவில்லை. இதற்கான அறிவிப்பு, தேவாலாய மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கியில் வெளியான கருப்பு புகை அறிவிப்பு தெரிவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று நடந்த இந்த தேர்வில், புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை தேவாலாய புகைபோக்கியிலிருந்து வந்த வெண்புகை தெரிவிக்கிறது.
பின்னர் புதிய போப் ஆண்டவர் யார் என்பது பற்றிய செய்தியை முறைப்படி வாடிகன் அரண்மனை வட்டாரங்கள் விரைவில் தெரிவிக்கும்

வெள்ளி, 8 மார்ச், 2013

மாதா பிராத்தனை,,,

மாதாவே துணை,அருள் அன்னைமாதாவின் மகிமையைக்காட்சி வெளியிடப்பட்டஅட்புதம் நிறைந்த பாடல் இது வாகும் ,,,மாதாவே துணை ,,,,,,

வெள்ளி, 1 மார்ச், 2013

விடை கொடுத்த போப்: கவலையில் மக்கள் ,,,


போப் பதினாறாம் பெனிடிக்ட் நேற்றுடன் விடைபெற்றதால் அவர் பிறந்த பவேரியாவில் இருந்து பல கத்தோலிக்க குருமார்களும் சபையாரும் வாடிகனுக்கு வந்துள்ளனர்.
போப் நேற்றிரவு எட்டுமணிக்குத் தனது பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றதால் இனி தன் பகுதியைச் சேர்ந்தவர் போப்பாண்டவராக இல்லையே என்று ஜேர்மானியர் கவலையில் முழ்கியிருந்தனர்.
இவரது விடைபெறும் விழா பேரணியில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் ஜேர்மனியில் இருந்து வாடிகன் வந்து குழுமியதாகவும் "பவேரியா தான் இன்னும் போப்பாக உள்ளது" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடியும் ஊர்வலத்தில் நடந்துசென்றுள்ளனர் எனவும் ஊடகத்தினர் தகவல் வெளியிட்டனர்.
ஜேர்மனியின் பேராயர் ஒருவர், போப்பாண்டவரை இறையியலாளர் போப் என்றும் மிகச் சிறந்த பிரசங்கிகளில் ஒருவர் என்றும் பாராட்டியுள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று மாலை ஜேர்மனியில் உள்ள அனைத்தும் தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை கூட்டம் நடைபெற்றது.
போப்பாண்டவர் இனி தான் பொதுவாழ்வில் ஈடுபடப் போவதில்லை என்றும் எஞ்சிய நாட்கள் முழுவதையும் ஜெபத்தில் மட்டும் செலவிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பதவி விலகும் போப்பாண்டவர் தனக்குப் பின் வரவேண்டியவர் குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,{புகைப்படங்கள் }