வியாழன், 2 மே, 2013

எழுந்து நில் ! விழித்துக் கொள்!


கிருஸ்துவ மதம் முதல் மூன்று நூற்றாண்டுகளில் தன்னை உலகத்திருக்கு தெரிவித்து கொள்வதில்கூட வெற்றி பெற முடியவில்லை. வாள்மூலம் கான்ஸ்டன்டைன் அதற்கு தனது நாட்டில் ஓர் இடம் கொடுத்து நாள்முதல் ஆன்மிக அல்லது லெளகீக நாகரிக முன்னேற்றத்திற்கு கிற்ஸ்துவ மதம் எதாவது உதவி செய்திருக்கிறதா? பூமி ஒரு சுற்றி வரும் கிரகம் என்று முதன் முதலாக நிருபித்த ஐரோப்பிய அறிஞனுக்குக் கிருஸ்துவ மதம் என்ன பரிசு அளித்தது?
 எந்த விஞ்ஞானியையாவது எப்போதாவது கிருஸ்துவ மதம் அங்கீகரித்துத்திருகிறதா? குற்றவியல் மற்றும் சமூகவியல் சட்டங்கள் , கலை ,வியாபாரம் இவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய கிருஸ்துவ இலக்கியத்தால் முடியுமா? இப்போதும் சர்ச் , மதம் அல்லாத இலக்கியத்தை பரவவிடுவதில்லை.
 தற்க்கால கல்வியையும் விஞ்ஞானத்தை அறிந்த ஒருவன் இன்று உண்மை கிருஸ்துவனாக இருக்க முடியுமா?  புதிய ஏற்பாட்டில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ எந்தக் கலையையோ, விஞ்ஞானத்தையோ புகழ்ந்து ஒரு வார்த்தை கூடக் கிடையாது.
 ஐரோப்பாவின் உன்னதச் சிந்தனையாளர்களான  வால்டர்,டார்வின்,புக்னர்,ப்லமேரியன், விக்டர் போன்ற பலரையும் இன்றைய கிருத்துவர்கள் கண்டனம் செய்யவும் நிந்திக்கவுமே செய்கின்றனர்.
  கிருத்துவர்கள் ஐரோப்பிய யூதர்களை எப்படி நடத்துகிறார்கள்? மத ஸ்தாபனங்கள் நீங்கலாக ஐரோப்பாவின் வேறெந்த துறையும் பைபிள்க்கு சம்மந்தமானவை இல்லை.கிருத்துவ மதத்திற்கு எதிராகவும் பைபிள்க்கு மாறாகவும் ஐரோப்பா ஒவ்வொரு உயர்வையும் அடைந்தது. கிருத்துவ மதம் ஐரோப்பாவில் இன்றும் முன் போலவே வலிமை பெற்றதாக இருக்குமானால் பாஸ்டர்,கோக் போன்ற விஞ்ஞானீகளையெல்லாம் உயிருடன் கொளுத்தியிருப்பார்கள்; டார்வின் போன்றோரை கழுவேற்றியிருப்பார்கள்.
  நவீன ஐரோப்பாவில் கிருத்துவம், நாகரிகம் இரண்டும் வெவ்வேறனாவை. நாகரிகம் தன் நிரந்தர எதிரியான மதத்தை அழிக்கவும், பாதிரி வர்க்கத்தையே வெறுக்கவும், அவர்களின் கைவசமிருக்கின்ற  கல்வி நிறுவனங்களையும் தர்ம ஸ்தாபனங்களையும் பிடுங்கி கொள்ளவும் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.
  அறிவிலிகளான விவசாயிகளின் கூட்டம் இல்லையென்றால், கிருத்துவ மதம் தன் இப்போதைய பரிதாபகரமான நிலையிலும் கூட ஒரு விநாடி இருக்க முடியாது; வேரோடு பிடுங்கபட்டிருக்கும். ஏனெனில் நகரவாசிகளான ஏழைகள் இப்போது சர்ச்சின் பரம விரோதிகள்.
 ஒவ்வொரு கிறிஸ்துவ குழந்தையும் இந்துக்களை ‘இழிந்தவர்கள்’ ‘வெறுக்கத்தக்கவர்கள்’  என்றும், உலகிலே மிகவும் பயங்கரமான பேய்களென்றும் அழைக்கும் படி அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறார்களே, இந்த ஏசுவின் சீடர்களுக்கு இந்துக்கள் என்ன குற்றம் செய்துவிட்டார்கள்?
  கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களை வெறுக்க வேண்டும், அதிலும் முக்கியமாக இந்துக்களை வெறுக்க வேண்டும் என்பதும் ஞாயிற்று கிழமைகளில் பள்ளிச் சிறுவர்களுக்கு கற்பிக்கப்படும் படங்களுள் ஒரு பகுதியாக இடம் பெறுகிறது. ஏனெனில் அந்தக் குழந்தைப் பருவம் முதல் அவர்கள் ஒவ்வொரு காசையும் கிறிஸ்துவ மதப் பிரச்சார அமைப்புக்களுக்கு கொடுக்க வேண்டுமே!
  உண்மைக்காக வேண்டாம், தங்கள் சொந்தக் குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்காகவாவது கிறிஸ்துவப் பாதிரிகள் இதைத் தடுக்கக் கூடாதா? இப்படிப்பட்ட குழந்தைகள் இரக்கமற்ற கொடியவர்களாக வளர்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
  மீளா நரகத்தின் சித்திரவதைகளையும், அங்குக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும், கந்தகக் கற்களையும் பற்றி எவ்வளவு அதிகமாக ஒருவர் சித்தரிக்கிறரோ,அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவ பழமைவாதிகளிடையே உயர்ந்த இடம் பெறுகிறார். அவர்களின் மத மறுமலர்ச்சி பிரச்சாரத்தை கேட்டுவிட்டு எனது நண்பரின் பணிப்பெண் ஒருத்தியைப் பைத்திக்கரா விடுதிக்கு அனுப்ப நேரிட்டது. நரகத்தின் நெருப்பும் அங்குள்ள கந்தகத்தின் சூடும் அவளுக்கு பொறுக்க முடியாமால் போய்விட்டது.
  இந்து மதத்திற்கு எதிராகச் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கும் நூல்களைப் பாருங்கள். கிறிஸ்துவ மதத்தை எதிர்த்து ஓர் இந்து அதே போல்  ஒரு வரி எழுதட்டும், பாதிரிகள் பழிக்குபழியாக நெருப்பைக் கக்கிவிடுவார்கள்.
  எனது நாட்டின் அருமை மக்களே! நான் இங்கு ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கிறேன். ஏறக்குறைய இங்குள்ள சமுகத்தின் மூலைமுடுக்குகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான்: பாதிரிகள் கூறுவதுபோல் நாம் பேய்களும் அல்ல, தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொள்வது போல் அவர்கள் தேவர்களும் அல்ல.

—–சுவாமி விவேகானந்தர்…..