புதன், 24 டிசம்பர், 2014

இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் எனது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக இணையங்கள் சார்பாக எனது உள்ளம்கனிந்த . இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது!–


பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என அனுராதபுரம் பேராயர் நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி பதற்ற நிலைமை தணிவதற்கு முன்னதாக பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது எந்தளவிற்கு பொருத்தமானது என்பதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த உடனேயே பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது.
பேராயர் சபையில் அங்கம் வகிக்கும் பல பேராயர்களின் நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.
சில அரசியல்வாதிகள் பாப்பாண்டவரின் படத்தை ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 22 நவம்பர், 2014

தேர்தல் அறிவிப்பு - கத்தோலிக்கத் திருச்சபை ஏமாற்றம்!

பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருகை தரும் தினத்துக்கு நெருக்கமான நாளில், ஜனாதிபதி தேர்தல் தினம் குறிக்கப்படும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பதுளை பேராயர் வணக்கத்துக்குரிய வின்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாப்பரசர் வருகையின் 10 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.குறித்த 10 நாட்களுக்குள் நாட்டில் இயல்பு ஏற்படும் என்ற அடிப்படையிலேயே இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. எனினும் தேர்தல் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு குறித்து வத்திக்கான் கவனம் செலுத்தியுள்ளது. ஏற்கனவே பாப்பரசரின் விஜயம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப வத்திக்கானின் இறுதித் தீர்மானம் வெளியிடப்படும் என்று பதுளை பேராயர் குறிப்பிட்டுள்ளார் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 3 நவம்பர், 2014

ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை! பாப்பரசரின் விஜயம்

 புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை நடக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் இருந்து இலங்கை வந்த மூன்று பிரதிநிதிகள் இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அகியோர் அடங்கிய அரசாங்க குழுவினரை சந்தித்துப் பேசிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஆயர் சுவாம்பிள்ளை கூறினார்.
உண்மையில் பாப்பரசரின் விஜத்தில் இலங்கை அரசாங்க தரப்பினர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததை இந்த சந்திப்பின் போது தாம் உணரக் கூடியதாக இருந்ததாக கூறிய ஆயர், அந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஜனவரி மாத முதல் வாரத்தில் இங்கையின் ஜனாதிபதி தேர்தல் நடக்கலாம் என்ற வகையில் செய்திகள் வரும் நிலையில், அப்படியாக நடந்தால் திருச்சபைக்கு அதில் ஆட்சேபம் ஏதும் கிடையாதா என்று கேட்டதற்கு பதிலளித்த ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, தேர்தல் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லையாயினும், எந்த சூழ்நிலையிலும் பாப்பரசரின் விஜயத்துக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்க தரப்பினர் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் -

இந்நாட்டில் மன்னார் ஆயர் மிகவும் விஷம் உடையவர் அவருடன் சேர்ந்து சிறு குழுக்கள் இலங்கையில் தமிழர்களை அரசு கொலை செய்ததாக சர்வதேசங்களுக்கும் கடிதம் எழுதுகின்றார். இவ்வாறான சூழ்ச்சி செய்யும் மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் இவ்வாறு பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொது செயலாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளுக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது மிக பாரதூரமான செயலாகும் இலங்கை .ராஜதந்திரிகள் முறையாக செயல்படாமை இதற்கு காரணமாகும். இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் நமது நாட்டிற்கு ஆபத்தாகிவரும் வேளையில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்புள்ளது. நாம் ஆயுத ரீதியாக புலிகளை அழித்திருந்தாலும் சர்வதேச ரீதியாக புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. வெளிநாடுகளில் நமது ராஜதந்திரிகள் சிறப்புரிமையை அனுபவிப்பது போல் நாட்டின் நலனை கவனிக்கவில்லையென்றும் கூறுகின்றனர்.
 எதிர்காலத்தில் முப்படைகளும் உசார் நிலையில் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னார் ஆயர் போன்ற விஷ பாம்புகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம் சில்லறை கடை அல்ல மிக பலம் வாய்ந்த அமைப்பு அது புலிகள் தடையை நீக்கிய சம்பவம் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சி என்று இக்கட்சியின் நிறைவேற்று அதிகாரி டி.விதானகே குறிப்பிடுகின்றார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 7 அக்டோபர், 2014

மன்னார் ஆயர் வடமாகாணசபை தொடர்பில் அதிருப்தி!

பொருத்தமற்ற நபரொருவரை வடக்கு முதல்வராக தெரிவு செய்துள்ளதாக மன்னார் ஆயர் தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடையே கவலை வெளியிட்டுள்ளார் அண்மையில் மன்னார் வந்திருந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்த போதும் மக்களது பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதாக ஆயர் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் பல குடும்பங்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இதில் பாதுகாப்பு படையினரால் பல்வேறு தேவைகளுக்காக காணிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் காரணமாக மன்னாரில் பெருமளவான மக்கள் காணியற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை போரின் போது கணவர்மாரை இழந்த பெண்களின் நிலை குறித்து தாம் விரிவாக முதலமைச்சருடன் பேசியதாக ஆயர் கூறினார்.
அவர்களின் வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் கூடுதல் அக்கறை செலுத்தப்படவேண்டும் என்று தாம் அவரிடம் கோரியதாகவும் ஆயர் குறிப்பிட்டார்.
எனினும் சுமார் ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் வடமாகாணசபை தொடர்பிலான மக்களது கவலைகளையே ஆயர் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புனித பரிசுந்த பாப்பரசர் பிரான்சிஸ் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு!!

புனித பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை மகிந்த ராஜபக்ச சந்திந்துள்ளார். இன்று வத்திக்கானில் அமைந்துள்ள பாப்பரசரின் வாசல் ஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பில் 2015ஆம் ஆண்டுக்கான பாப்பரசரின் வருகைக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை மகிந்த ராஜபக்ச பாப்பரசரிடம் கையளித்துள்ளார்.

இதேநேரம் பாப்பரசருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பாப்பரசரின் இலங்கைப் பயணம், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாப்பரசரின் இலங்கைப் பயணம் நீதியையும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக உழைப்பவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசருடனான சந்திப்பில், மகிந்த தம்பதிகளுடன், தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளியுறவு அமைச்சின் கண்காணிப்புக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுபினர் சஜின் வாஸ் குணவரதன, எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடா ஜோன் அமரதுங்க ஆகியோரும் கத்தோலிக்க அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.


இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு

புதன், 1 அக்டோபர், 2014

பாப்பரசரை அழைக்க வத்திக்கான் செல்லும் மகிந்த!

மகிந்த ராஜபக்சே  இந்த மாத ஆரம்பத்தில் (ஒக்டோபர்) வத்திக்கான் பயணம் ஒன்றை  செய்யவுள்ளார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்கவே அவர் அங்கு செல்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வார் என முன்னதாக இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் பாப்பரசர் பின்னர் 15ம் திகதி பிலிப்பைன்சுக்கு பயணம் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

பாப்­ப­ரசர் நல்­லதோர் அர­சியல் தீர்­வுக்கு அழைப்பு விடுப்பார்;

 இலங்­கையின் சிறு­பான்மை மக்­க­ளுக்கு நல்­ல­தொரு அர­சியல் தீர்வு வழங்க வேண்­டு ­மென்ற அழைப்­பையும் இலங்கை வரும் பாப்­ப­ரசர் விடுப்பார் என்­பதை நாம் எதிர்பார்க்­கின்றோம்.” இவ்­வாறு மன்னார் ஆயர் இராயப்பு யோசப், திரு­கோ­ண­மலை மறை மாவட்ட ஆயர் கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை, மட்­டக்­க­ளப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்­னையா ஆகியோர் தெரி­வித்­தனர்.
 இலங்­கையில் அமை­தியும் சமா­தா­னமும் வர­வேண்டும். போரினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீட்சி பெற வேண்டும்.
சமா­தானப் பாதையில் இலங்கை செல்ல வேண்­டு­மானால் அர­சியல் தீர்­வுக்­கான வழி­களை அரசு திறந்­து­விட வேண்டும் என்ற கோரிக்­கையை பாப்­ப­ரசர் தனது உரையில் குறிப்­பி­டுவார் என நாம் நம்­பு­கின்­றோ­மென மேலும் அவர்கள் தெரி­வித்­தார்கள்.
 பரி­சுத்த பாப்­ப­ரசர் முதலாம் பிரான்ஸில் திருத்­தந்­தையின் இலங்­கைக்­கான வரு­கையை முன்­னிட்டு கருத்துத் தெரி­வித்த போதே ஆயர் சபையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மூவரும் இவ்­வா­றான கருத்தை தெரி­வித்­தனர்.மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு யோசப் தன கருத்தைத் தெரி­விக்கும் போது பாப்­பாண்­டவர் இலங்­கைக்கு வரு­வது இலங்­கையில் கட­மை­யாற்றி வரும் யோசப் வாஸ் அடி­க­ளா­ருக்கு புனி­தப்­பட்­டதை அளிப்­ப­தற்கும், போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை ஆசீர்­வ­திப்­ப­தற்­கா­க­வு­மாகும்.
 
பாப்­ப­ர­சரின் வருகை எக்­கா­ரணம் கொண்டும் அர­சியல் மய­மாக்­கப்­படக் கூடாது. அத்­த­கை­ய­தொரு சந்­தர்ப்­பமும் உரு­வாக்­கப்­ப­ட­மாட்­டாது. மடு­மாதா தேவா­லயம் சமா­தா­னத்தின் ஒரு­மை­ய­மாக இருந்து வரு­கி­றது. அங்கு வருகை தர­வி­ருக்கும் பாப்­ப­ரசர் வட­கி­ழக்கில் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை அங்கு சந்­தித்து ஆசீர்­வ­திப்­ப­தற்­கா­கவும் அவரின் வருகை அமைய இருக்­கி­றது.
 
அவ்­வே­ளையில் எல்லா மக்­களும் குடும்ப உணர்­வுடன் சகோ­தர வாஞ்­சை­யுடன் ஒன்று கூடி பாப்­ப­ர­ச­ரிடம் ஆசீர்­வாதம் பெற வேண்­டு­மென்­பதே எமது பேரா­சை­யாகும்.
 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக யுத்­தத்­தினால் நேர­டி­யாக மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இந்த மக்­க­ளுக்கு சுபீட்­ச­மான வாழ்­வொன்று கிடைக்கப் பெற வேண்டும். எனவே, பாதிக்­கப்­பட்ட மக்கள் பாப்­ப­ர­சரை சந்­திக்­க­வி­ருப்­பது மாபெரும் வரப்­பி­ர­சா­த­மென்றே கூற வேண்டும். எனவே தான் அவரின் வரு­கையை அர­சியல் மயப்­ப­டுத்தக் கூடாது என எதிர்­பார்க்­கின்றோம்.
 இந்த நாட்டில் நல்­ல­தொரு அர­சியல் சூழ்­நி­லையும் சமா­தான சூழலும் உரு­வாக வேண்­டு­மானால் அர­சாங்கம் உலக நாடு­க­ளுடன் ஒத்­துப்­போக வேண்டும். போரினால் ஏற்­பட்ட வடுக்­களை இல்­லாது ஒழிக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட அப்­பாவி மக்­களின் வாழ்வில் ஒரு மீட்­சியை உரு­வாக்க வேண்­டு­மென்­பதே எமது பேரவா ஆகும்.
 திரு­கோ­ண­மலை மறை மாவட்ட ஆயர் கலா­நிதி கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை தனது கருத்தை தெரி­விக்­கையில்,
கத்­தோ­லிக்க திருச்­ச­பைக்கு தலைமை வகிக்கும் திருத்­தந்தை முதலாம் பிரான்சிஸ் எமது நாட்­டுக்கு வருகை தரு­வது மாபெரும் வரப்­பி­ர­சா­த­மாகும்.
ஒல்­லாந்தர் ஆட்சிக் காலத்தில் கத்­தோ­லிக்க நிறு­வ­னங்கள், ஆல­யங்கள், நிர்­மூ­ல­மாக்­கப்­பட்ட வேளையில் கோவை நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்கள் இலங்­கையில் அளப்­ப­ரிய தொண்டு செய்­தார்கள். மக்கள் அவர்­களின் தொடு­களை ஏற்­றுக்­கொண்­டார்கள். தற்­போது புனித தந்­தை­யென்ற வகையில் அவர் இலங்கை வரு­வது எல்­லோ­ருக்கும் மகிழ்ச்சி தரும் விட­ய­மாகும்.
 யுத்­தத்­தினால் பாதிக்­க­பப்­பட்ட மக்­களை சந்­தித்து அவர்­க­ளுக்கு ஆறுதல் அளிக்­க­வரும் அவரின் வருகை நல்­ல­தொரு மாற்­றத்தைத் தரு­மென்று நம்­பு­கின்றோம். புனித தந்தை நாட்டின் அர­சியல் தலை­வர்­களை மற்றும் சமயப் பெரி­யோர்­களை சந்­தித்து உரை­யா­ட­வுள்ளார்.
 இச்­சந்­திப்பின் போது இத­னூ­டாக நாட்டின் பிரச்­சி­னைக்கு தீர்க்­கப்­ப­டா­துள்ள சிறு­பான்மை மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கும் நல்ல தீர்­வொன்றை வழங்க வேண்­டு­மென்ற அழைப்­பொன்­றையும் விடுவார் என்­ப­தையும் நாம் எதிர்பார்க்­கின்றோம்.
 அவ­ரு­டைய வருகை கத்­தோ­லிக்க கிறிஸ்­தவ மற்றும் ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கும் ஒரு மாபெரும் ஆசிர்­வா­த­மாக இருக்­கு­மென நாம் நம்­பு­கின்றோம் என ஆயர் கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை தெரி­வித்தார்.
 மட்­டக்­க­ளப்பு மறை­மா­வட்ட ஆயர் யோசப் பொன்­னையா கருத்துத் தெரி­விக்­கையில்,
 பாப்­ப­ர­சரின் வரு­கையை மிக நீண்ட கால­மா­கவே இலங்கை மக்கள் எதிர்­பார்த்த வண்ணம் இருக்­கின்­றார்கள். பாப்­ப­ர­சரின் வரு­கையின் போது மூன்று இடங்­களில் தந்தை உரை­யாற்­ற­வுள்ளார்.
 
விமான நிலை­யத்­திலும் இரண்­டா­வது அனைத்து மத சமயத் தலை­வர்­களை சந்­தி்க்­கின்ற வேளை­யிலும், காலி முகத்­தி­டலில் நடை­பெ­ற­வுள்ள திருப்­பலி நிறை­வேற்றும் போதும் உரை­யாற்­றுவார். அத்­துடன், மடு ஆல­யத்தில் பாதிக்­கப்­பட்ட மக்களைக் கண்டு உரையாற்றி ஆசீர்வதிக்கப்பட உள்ளார்.
 
இவற்றுடன் ஜனாதிபதி மற்றும் பல சமயத் தலைவர்களையும் சந்தித்து உரையாடவுமுள்ளார்.
 
அரசாங்கத்திற்கு நல்ல செய்தியை பாப்பரசர் கூறுவார் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். பாப்பரசர் இலங்கையின் எல்லா வகைப் பிரச்சினைகளையும் நன்கு அறிவார்.
 
எனவே, இலங்கையில் நிரந்தர சமாதானமும் அமைதியும் வர பாப்பரசர் ஆசீர்வதிப்பார் என நாம் எதிர்பார்க்கிறோமென ஆயர் பொன்னையா தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 18 செப்டம்பர், 2014

கத்தோலிக்க போதகருக்கு புனிதர் பட்டம்: போப் ஆண்டவர் ஒப்புதல்

 இலங்கையில் சமயப்பணியாற்றிய 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கியுசெப்பி பாஸ் என்ற போதகருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் நேற்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர், போதகர் கியுசெப்பி பாஸ். 17–ம் நூற்றாண்டை சேர்ந்த இவர் கோவாவில் பிறந்து, இலங்கையில் கத்தோலிக்க சமயப்பணி ஆற்றினார்.
இவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு விதிகளை மீறி போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று ஒப்புதல் வழங்கினார்.
பொதுவாக முதலில் முக்திப்பேறு அளிப்பதற்கு ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். புனிதர் பட்டம் வழங்குவதற்கு மேலும் ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். இந்த அற்புதங்களை அங்கீகரித்து போப் ஆண்டவர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிப்பார். இதுதான் நடைமுறை.
ஆனால் புனித 23–ம் ஜானுக்கு வழங்கியது போன்று 2–வது அற்புதம் இன்றியே கியு செப்பி பாஸ்க்கு புனிதர் பட்டம் வழங்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒப்புதல் வழங்கி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிற போது கியு செப்பி பாஸ்க்கு, போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி அர்ச்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 15 செப்டம்பர், 2014

மாதா சொரூபம் இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைப்பு!

 ஏழாலை மேற்கு பகுதியில் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய மாதா சொரூபம் ஒன்று, திங்கட்கிழமை  இரவு இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
கடையொன்றில் சுவருடன் அமைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துடன் செவ்வாய்க்கிழமை  தொடர்புகொண்ட கேட்டபோது, தங்களுக்கு இது தொடர்பில் முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இலங்கைப் பயணம் பாப்பாரசர் பிரான்சிஸ்சின் உத்தியோகபூர்வமாக அறிவித்தது ??!

2015ஆம் ஆண்டு ஐனவரி மாதம் இலங்கைக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் பயணம் செய்வார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன் அவரின் வருகைக்கான உத்தியோகபூர்வ இலட்சினையையம் வெளியிட்டு வைத்தது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

சனி, 30 ஆகஸ்ட், 2014

கொடியேற்றத்துடன் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா:

 தொடக்கம் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
 கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படும்
 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, கொடியேற்றம்
 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 
முன்னதாக திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. 22 அடி நீளமும், 14 அடி உயரமும் கொண்ட புனிதக் கொடி, பேராலய கிழக்குப் பகுதியிலிருந்து பாரம்பரியான பாதைகளில் ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டுப் பேராலயத்தை அடைந்தது. தொடர்ந்து, தஞ்சாவூர் மறைமாவட்ட 
ஆயர் எம். தேவதாஸ் 
அம்புரோஸ் தலைமையில், கொடியைப் புனிதம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ” ஆவே மரியே மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். நாகை 
மாவட்ட ஆட்சியர்
 து. முனுசாமி, தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் சஞ்சய் குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆர். பொன்னி, காளிராஜ் மகேஷ்குமார் உள்ளிட்டோர் வழிபாடுகளில் பங்கேற்றனர். பேராலய அதிபர் ஏ. மைக்கேல் அடிகளார், துணை அதிபர் எஸ்.ஏ. சூசைமாணிக்கம்
, மேலாளர் 
தார்சீஸ்ராஜ் மற்றும் ஆரோக்கியசுந்தரம் உள்ளிட்ட உதவி பங்குத் தந்தையர்கள் வழிபாடுகளை முன்னின்று நடத்தினர். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான 
பக்தர்களும், 
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் திரளான அளவில் விழாவில் பங்கேற்றனர்.சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தீயணைப்பு மீட்புப் படையினர்
 கடற்கரை 
மற்றும் சில பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். பேராலய ஆண்டுவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள்
 இயக்கப்பட்டன.
  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்.
 

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மரணத்தின் ரகசியத்தை கூறிய போப் ஆண்டவர்


pop00
போப் ஆண்டவர் பிரான்சிஸ், தான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ கடவுள் ஆயுள் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 77 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக தென்கொரியா சென்றுவிட்டு, வாடிகன் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் கூறுகையில், எனது

இந்த பயணத்தின் போது மக்களின் பெருந்தன்மை நன்கு தெரிந்தது. நான் எனது பாவங்கள், தவறுகள் குறித்து அறிய முயன்றேன், ஆனால் அதற்காக பெருமைப்படவில்லை. ஏனெனில் நான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன், அதுவரை மட்டுமே கடவுள் எனக்கு ஆயுள்

வழங்கியுள்ளார். நான் போப் ஆண்டவராக தெரிவு செய்யப்பட்டபோது இயற்கையாகவே பிரபலமாக தொடங்கினேன், தொடக்கத்தில் அது எனக்கு ஒருவித பீதியை ஏற்படுத்தியது. 60 அண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க பிஷப்புகள் ஓய்வு பெறுவது என்பது நடைமுறையில் கேள்விப்படாத ஒன்றாக இருந்த நிலையில் தற்போது அது சாதாரணமாகியுள்ளது. எனக்கு முன்பு போப் ஆண்டவர் பொறுப்பில் இருந்த 16–ம் பெனடிக்ட், தொடர்ந்து நீண்ட நாள் பணியாற்ற முடியாது என கருதியதால் அப்பதவியில் இருந்து

ஓய்வு பெற்று அதற்கான கதவை திறந்து விட்டுள்ளார். மேலும், நான் நரம்பு கோளாறினால் மிகவும் அவதிப்படுகிறேன், அதற்காக அர்ஜென்டினாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ அணியினர் எனக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

pop00

சனி, 16 ஆகஸ்ட், 2014

அன்னையின் ஆவணித் திருவிழாவில் திரண்ட ஆறு இலட்சம் மக்கள்!

மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இன்று திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது. கர்தினால் அதிமேதகு மல்கம் ரஞ்சித் ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் மேதகு றேமன் விக்கிரமசிங்க, அநுராதபுர ஆயர் மேதகு நேபட் அன்றாடி ஆண்டகை கொழும்பு இளைப்பாறிய பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் உட்பட இத்தாலியன் ஆயர் மன்றத்தின் பிரதிநிதிகளாக மடுவிற்கு வருகைதந்திருந்த அருட்பணியாளர்கள் மென்சின்நோர் லேனாட் டீ முருகோ, மொன்டினியோ அன்ரனியோ அமராத்தி ஆகிய அடிகளாருடன் நூற்றுக்கு மேற்பட்ட அருட்பணியாளர்களும் திருவிழா திருப்பலியில் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவின் போது மன்னார் மறை மாவட்ட ஆயர் மறை மாவட்ட மக்களுக்கு வருடத்தில் இருமுறை வழங்கும் பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக அன்னையின் பரிந்துரையை வேண்டி வழங்கும் ஆசியுரையை திருச்சபையின் தாய் மொழியாம் இலத்தீனில் மொழிந்தார். இத்திருவிழா திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. இதன் பின் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் திருச்சுரூப ஆசிரும் அங்கு குழுமியிருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து, உணவு, குடிதண்ணீர், சுகாதாரம், தங்குமிடம், நீதிமன்ற ஒழுங்கு போன்ற சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. திருச்சுருப ஆசீர் நிறைவுற்றதும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையும் இலங்கைக்கு வருகைதரவிருக்கும் பரிசுத்த பாப்பரசரின் கொழும்பு, மடு ஆகிய விஜயங்களின்போது நடைபெறவிருக்கும் நிகழ்வுகளை பற்றி கூடியிருந்த மக்களுக்குத் தெரிவித்தனர். இவ்விழாவுக்கு இம்முறை நாட்டின் பலபாகங்களிலுமிருந்து சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் என மடு பரிபாலகர் வட்டம் தெரிவித்தது.
 

 

திங்கள், 28 ஜூலை, 2014

கிறிஸ்துவ மதத்தை அழிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: கதறும் பிஷப் (காணோளி, )

                                                   
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதிக்கத்தால் கிறிஸ்துவ மதம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாதிரியார் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஈராக்கின் மொசூல் நகரையும், சிரியாவில் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இந்த இஸ்லாமிய நாட்டிற்கு தன்னை தானே தலைவர் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை நிறுவிய அபூபெக்கர் அல் பாக்தாதி என அறிவித்துள்ளார். இந்நிலையில் அங்கு குடியிருக்கும் ஏராளாமான மக்களை இந்த அமைப்பினர் சமீபத்தில் கொன்று குவித்தது உலக நாடுகளை கதி கலங்க செய்துள்ளது. தற்போது அங்கு உள்ள கிறிஸ்துவர்களை வெளியேற்றும் வகையில் அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் அல்லது 'ஜிஷியா' வரி கொடுக்க வேண்டும் என கடந்த 19ம் திகதி அல்பாக்தாதி அறிவித்து, ஒரு வாரம் அவகாசம் அளித்திருந்தார். இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களாக மாறியுள்ளனர்.மேலும் பலர், தங்கள் வழிபாட்டுத் தலங்களை பூட்டி விட்டு, பத்திரமான இடங்களுக்கு வெளியேறியதால் பல தேவாலயங்களில் வழிபாடே நடைபெறவில்லை. இதுகுறித்து, பாக்தாத் நகரில் உள்ள தேவாலயத்தை சேர்ந்த ஆங்கிலிகன் கெனான் ஆண்ட்ரூ வைட் என்ற பாதிரியார் கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தலைவரித்தாடுகிறது என்றும் இதனால் ஈராக்கில் கிறிஸ்துவ மதம் அழிந்து வருகிறது எனவும் கூறியுள்ளார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொசூல் நகரில் இருந்த 5,000 கிறிஸ்துவர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வியாழன், 17 ஜூலை, 2014

முள்ளிவாய்க்காலில் அஞ்சலித் திருப்பலி நடத்த பாப்பரசரிடம்


தமிழ் சிவில் அமையம் வேண்டுகோள்!   
பாப்பரசரின் இலங்கை விஜயத்தை தமது அரசியல் தேவைகளுக்கு அரசு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ள தமிழ் சிவில் சமூக அமையத்தினர், அத்தகைய தோற்றத்தை முறியடிப்பதற்காக பாப்பரசர் தமது விஜயத்தின் போது வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். அல்லது முள்ளிவாய்க்காலுக்கு அல்லாவிடின் குறைந்த பட்சம் மடு தேவாலயத்தில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவாகத் திருப்பலி ஒன்றை பாப்பரசர் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
   தமிழ் சிவில் சமூக அமையத்தினர் கடந்த ஜூலை 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இலங்கைக்கான வத்திக்கான் பிரதிநிதி பேராயர் பியரி ந்யுகேன் வான் டாட் (Archbishop Pierre Nguyen Van Tot) ஐ சந்தித்து புனித பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பாக கலந்துரையாடிமையோடு இவ்விடயம் தொடர்பில் பாப்பரசருக்கு கடிதம் ஒன்றையும் வத்திக்கான் பிரதிநிதி ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாப்பரசரின் விஜயம் அரசாங்கத்தால் தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதைப் பற்றி தமிழ் சிவில் சமூக அமையத்தினர் பாப்பரசரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பாப்பரசரின் விஜயம் அரசுக்கு சார்பாக மாற்றப்படுவதை முறியடிப்பதற்காக பாப்பரசர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என்றும் - குறிப்பாக முடிந்தால் முள்ளிவாய்க்கால் அல்லாவிடின் குறைந்த பட்சம் மடு தேவாலயத்தில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவாக திருப்பலி ஒன்றை பாப்பரசர் நடத்த வேண்டும் என்றும் - தமிழ் சிவில் சமூக அமைய உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கும் போது தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்த வேண்டுமெனவும் சிவில் சமூக அமையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கை அரசாங்கம் இதற்கு செவி சாய்க்கும் என்ற நம்பிக்கையில் இவ்வேண்டுகோளை விடுக்கவில்லை என தெளிவுபடுத்தியிருக்கும் தமிழ் சிவில் சமூக அமையத்தினர், எனினும் பாப்பரசர் இவ்விடயங்களைப் பற்றி இலங்கை ஜனாதிபதியிடம் பேசுவது இவ்விடயங்களுக்கு சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுத் தரக் கூடியது என்பதாலேயே தாம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றனர் எனவும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மற்றைய செய்திகள்

வியாழன், 26 ஜூன், 2014

தேவதைக்கு முத்தமிட்ட போப் (காணொளி இணைப்பு)

popc
 சாலையோரத்தில் படுக்கையிலிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை போப் பிரான்சிஸ் ஆசிர்வதித்துள்ளார். இத்தாலியில் உள்ள கலாப்ரி நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு போப் பிரான்சிஸ் திரும்பி வந்துகொண்டிருந்தார். அந்த பாதையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, அவரது குடும்பத்தினர் படுக்க வைத்திருந்தனர். அப்பெண்ணின் குடும்பத்தினர் சாலையோரம் வைத்திருந்த பேனரில், போப் அவர்களே தேவதையை பார்க்க தயவு செய்து நில்லுங்கள் என்று எழுதியிருந்ததுடன் சாலையில் போப் வருவதை பார்த்தவுடன் அவரது காரை நிறுத்துமாறு சைகை செய்ததை கவனித்த போப், தனது காரை நிறுத்தச் சொல்லி அதிலிருந்து இறங்கி அப்பெண்ணை ஆசிர்வாதம் செய்ததோடு அவரது நெற்றியில் முத்தமிட்டார். மேலும், அப்பெண்ணின் குடும்பத்தாரிடமும் அவர் கைகுலுக்கினார். மாபியா கும்பலால் போப்பிற்கு ஆபத்து நேரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளபோதும், அதைப் பொருட்படுத்தாமல் எவ்வித பயமுமின்றி போப், சாலையோரம் நின்றிருந்த அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.
  மற்றைய செய்திகள்.புகைப்படங்கள்.




சனி, 14 ஜூன், 2014

புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு - புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவுபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயமானது சுமார் 214 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
இந்த ஆலயத்தின் கொடியேற்றமானது 04ம் திகதி புதன்கிழமை ஆரம்பமானதுடன் ஒன்பது தினங்கள் ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை வழிபாடும் திருச்சொருப பவனியும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
 
குரு முதல்வர் அருட்தந்தை மொறாயஸ் தலைமையில் பூசைகள் நடைபெற்று இந்த திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றதுடன் இந்த பவனியில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.
 
நேற்று காலை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை கிறைஸ்டன் அவுஸ்கோன் தலைமையில் வழிபாடுகள் ஆரம்பமானது.
இதன்போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகை கலந்துகொண்டு கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
 
இதனைத்தொடர்ந்து பல்வேறு நற்சிந்தனைகள் வழங்கப்பட்டதுடன் அடியார்களுக்கு ஆசிர்வாதங்களும் வழங்கப்பட்டன.
உற்சவத்தின்போது ஆலயத்தின் திருவிழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆயரினால் பரிசுகள் வழங்கப்பட்டன.
 
அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் செய்யப்பட்ட பகுதியில் விசேட பூசைகள் நடைபெற்றதுடன் மேள தாளங்கள் முழங்க கொடியிறக்கும் செய்யப்பட்டது.
இறுதி உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்







 

புகைப்படங்கள்இணைப்பு

செவ்வாய், 10 ஜூன், 2014

நெஞ்சம் மறக்குதில்லை ....!

mmmm
உன்னை
 பிரிந்து பல வருடங்கள்
 ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு
 நொடிகூட என்னிடம்
 இல்லை ....!!!
சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்
என் இதயத்தில்
 உன்னை அடைகாக்கிறேன்
 காதல் கிளிகள் சிறகடித்து
 பறக்கின்றன
 

திங்கள், 9 ஜூன், 2014

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத்


ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

செவ்வாய், 13 மே, 2014

இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,



http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/http://www.nilavarai.com/?p=2483http://navatkirirajah.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/ http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/http://www.navarkiri.com/2014/05/blog-post_8219.html



திங்கள், 12 மே, 2014

பாப்பாண்டவர் அடுத்த ஆண்டு இலங்கைக்கு விஜயம்

பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதியளவில் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இலங்கைப் பேராயர்கள் வத்திக்கானுக்கு விஜயம் செய்து, பாப்பாண்டவரை சந்தித்திருந்தனர், இந்த விஜயத்தின் போது இலங்கை விஜயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மடு தேவாலயத்திற்கு பாப்பாண்டவர் விஜயம் செய்வாரா என்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இதேவேளை, பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் குறித்து விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கொழும்பு பேராயர் காரியாலய பேச்சாளர் வணக்கத்திற்குரிய பெனடிக் ஜோசப் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
 

ஞாயிறு, 4 மே, 2014

சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுக ;

ஆயர்களிடம் பாப்பரசர் வேண்டுகோள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வத்திக்கானில் வைத்து இலங்கை ஆயர்கள் குழுவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை பெரும் இனவேறுபாடு உடைய நாடு இல்லை என இதன்போது குறிப்பிட்ட அவர், ஆனால் வெவ்வேறு சமயம் மற்றும் மரபுகளை உடையது என சுட்டிக்காட்டியுள்ளார். தனியொரு மத அடையாளத்தை உறுதி
 
செய்யும் நோக்கிலான தவறான அர்த்தங்களை ஊக்குவிக்கும் சிலரே அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மதபேதங்கள் தேசிய அமைதியை சீர்குலைக்கும் இதனால் ஆயர்கள் அமைதியான சூழலை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரியுள்ளார்.

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என


ஈஸ்டர் ஸ்பெஷல் கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
உலகத்தை எகிப்து, மேதியா, பாரசீகம், பாபிலோன், கிரேக்கம், ரோம் என ஆறு பேரரசுகள் ஆட்சி செய்தன.
கி.பி. 1ல் ரோம் நாட்டின் பேரரசராக திபேரியு என்பவர் ஆட்சி செய்தார்.
அந்தக் காலத்தில் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதகுலத்தில் கன்னி மரியாளின் வயிற்றில் இயேசு பிறந்தார்.
கி.பி. 34ல் யூதாஸ் என்ற சீடனால் 30 வெள்ளிக்காசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டார். யூத மதக்குருக்கள் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொன்றனர்.
இயேசுவின் சரீரம் கன்மலையில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது.
மரணத்திற்குப் பின்பு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று இயேசு முன்னறிவித்து இருந்ததால் ரோம் நாட்டின் போர்ச் சேவகர்கள் அவரது கல்லறையைக் காவல் காத்தனர்.
மூன்றாம் நாள் அதிகாலையில் வானத்தில் இருந்து வந்த கடவுளின் தூதன், கல்லறையில் வைக்கப்பட்டிருந்த பெரிய கல்லைப் புரட்டி அதன் மீது அமர்ந்தான், போர்ச்சேவகர்கள் தரையில் விழுந்து செத்தவர்கள் போல ஆனார்கள்.
அப்போது இயேசுவின் கல்லறைக்கு மரியாதை செலுத்த சிலர் வந்தனர். கல் புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டதும், சரீரத்தை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர் என்று புலம்பினர்.
அப்போது அங்கிருந்த கடவுளின் தூதன் அவர்களை நோக்கி,"அவர் அங்கே இல்லை, தாம் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்'' என்றார்.
பின்பு 11 சீடர்களில் தோமா என்பவரைத் தவிர பத்து பேர் பூட்டியிருந்த ஓர் அறையில் இருந்தனர். இயேசு அவர்களின் நடுவே காட்சியளித்தார்.

தோமாவுக்கு இந்த தகவலை அவர்கள் கூறினர், தோமாவோ இதை நம்பவில்லை.
அப்போது இயேசு அங்கு வந்தார், தோமாவை நோக்கி “சந்தேகப்படாதே” என்று கூறி அவனது கைவிரலால் தன் காயங்களைத் தொட்டுக் காட்டினார்.
அவன் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுதான். இயேசு சீடர்களை நோக்கி,"கண்டு நீங்கள் விசுவாசிப்பீர்கள். காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்'' என்று கூறினார்.
அன்று முதல் இயேசு 40 நாட்கள் வரை தம்மை நம்பிய சீடர்களுக்கு காட்சியளித்து, 40வது நாள் பரலோகத்திற்கு ஏறிச் சென்றார்.

ஈஸ்டர் முட்டை
முட்டையானது ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக பெரும்பாலும் கருதப்படுகிறது, ஒரு முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புது வாழ்வின் குறியீடாக இருக்கிறது.
ஈஸ்டர் விழா அன்று நன்றாக வேக வைக்கப்பட்ட முட்டையை சர்க்கரைப்பாகு ஊற்றி பதப்படுத்தி வண்ணம் பூசி அழகுபடுத்துகின்றனர்.

அதை கூடைகளில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். பெரும்பாலும் இதில் சிவப்பு வண்ணம் தடவுவது வழக்கம்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உலக மக்களுக்காக ரத்தம் சிந்தியதை நினைவு கூரும் வகையில் இந்த வண்ணம் தடவப்படுகிறது.
ஆனால் தற்கால வழக்கில் சாக்லெட் முட்டைகள், ஜெல்லி பீன்கள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களை உள்ளடக்கிய பிளாஸ்டிக் முட்டைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.