வியாழன், 26 ஜூன், 2014

தேவதைக்கு முத்தமிட்ட போப் (காணொளி இணைப்பு)

popc
 சாலையோரத்தில் படுக்கையிலிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை போப் பிரான்சிஸ் ஆசிர்வதித்துள்ளார். இத்தாலியில் உள்ள கலாப்ரி நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு போப் பிரான்சிஸ் திரும்பி வந்துகொண்டிருந்தார். அந்த பாதையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, அவரது குடும்பத்தினர் படுக்க வைத்திருந்தனர். அப்பெண்ணின் குடும்பத்தினர் சாலையோரம் வைத்திருந்த பேனரில், போப் அவர்களே தேவதையை பார்க்க தயவு செய்து நில்லுங்கள் என்று எழுதியிருந்ததுடன் சாலையில் போப் வருவதை பார்த்தவுடன் அவரது காரை நிறுத்துமாறு சைகை செய்ததை கவனித்த போப், தனது காரை நிறுத்தச் சொல்லி அதிலிருந்து இறங்கி அப்பெண்ணை ஆசிர்வாதம் செய்ததோடு அவரது நெற்றியில் முத்தமிட்டார். மேலும், அப்பெண்ணின் குடும்பத்தாரிடமும் அவர் கைகுலுக்கினார். மாபியா கும்பலால் போப்பிற்கு ஆபத்து நேரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளபோதும், அதைப் பொருட்படுத்தாமல் எவ்வித பயமுமின்றி போப், சாலையோரம் நின்றிருந்த அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.
  மற்றைய செய்திகள்.புகைப்படங்கள்.




சனி, 14 ஜூன், 2014

புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு - புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவுபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயமானது சுமார் 214 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
இந்த ஆலயத்தின் கொடியேற்றமானது 04ம் திகதி புதன்கிழமை ஆரம்பமானதுடன் ஒன்பது தினங்கள் ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை வழிபாடும் திருச்சொருப பவனியும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
 
குரு முதல்வர் அருட்தந்தை மொறாயஸ் தலைமையில் பூசைகள் நடைபெற்று இந்த திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றதுடன் இந்த பவனியில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.
 
நேற்று காலை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை கிறைஸ்டன் அவுஸ்கோன் தலைமையில் வழிபாடுகள் ஆரம்பமானது.
இதன்போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகை கலந்துகொண்டு கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
 
இதனைத்தொடர்ந்து பல்வேறு நற்சிந்தனைகள் வழங்கப்பட்டதுடன் அடியார்களுக்கு ஆசிர்வாதங்களும் வழங்கப்பட்டன.
உற்சவத்தின்போது ஆலயத்தின் திருவிழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆயரினால் பரிசுகள் வழங்கப்பட்டன.
 
அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் செய்யப்பட்ட பகுதியில் விசேட பூசைகள் நடைபெற்றதுடன் மேள தாளங்கள் முழங்க கொடியிறக்கும் செய்யப்பட்டது.
இறுதி உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்







 

புகைப்படங்கள்இணைப்பு

செவ்வாய், 10 ஜூன், 2014

நெஞ்சம் மறக்குதில்லை ....!

mmmm
உன்னை
 பிரிந்து பல வருடங்கள்
 ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு
 நொடிகூட என்னிடம்
 இல்லை ....!!!
சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்
என் இதயத்தில்
 உன்னை அடைகாக்கிறேன்
 காதல் கிளிகள் சிறகடித்து
 பறக்கின்றன
 

திங்கள், 9 ஜூன், 2014

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத்


ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.