திங்கள், 28 ஜூலை, 2014

கிறிஸ்துவ மதத்தை அழிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: கதறும் பிஷப் (காணோளி, )

                                                   
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதிக்கத்தால் கிறிஸ்துவ மதம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாதிரியார் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஈராக்கின் மொசூல் நகரையும், சிரியாவில் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இந்த இஸ்லாமிய நாட்டிற்கு தன்னை தானே தலைவர் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை நிறுவிய அபூபெக்கர் அல் பாக்தாதி என அறிவித்துள்ளார். இந்நிலையில் அங்கு குடியிருக்கும் ஏராளாமான மக்களை இந்த அமைப்பினர் சமீபத்தில் கொன்று குவித்தது உலக நாடுகளை கதி கலங்க செய்துள்ளது. தற்போது அங்கு உள்ள கிறிஸ்துவர்களை வெளியேற்றும் வகையில் அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் அல்லது 'ஜிஷியா' வரி கொடுக்க வேண்டும் என கடந்த 19ம் திகதி அல்பாக்தாதி அறிவித்து, ஒரு வாரம் அவகாசம் அளித்திருந்தார். இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களாக மாறியுள்ளனர்.மேலும் பலர், தங்கள் வழிபாட்டுத் தலங்களை பூட்டி விட்டு, பத்திரமான இடங்களுக்கு வெளியேறியதால் பல தேவாலயங்களில் வழிபாடே நடைபெறவில்லை. இதுகுறித்து, பாக்தாத் நகரில் உள்ள தேவாலயத்தை சேர்ந்த ஆங்கிலிகன் கெனான் ஆண்ட்ரூ வைட் என்ற பாதிரியார் கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தலைவரித்தாடுகிறது என்றும் இதனால் ஈராக்கில் கிறிஸ்துவ மதம் அழிந்து வருகிறது எனவும் கூறியுள்ளார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொசூல் நகரில் இருந்த 5,000 கிறிஸ்துவர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வியாழன், 17 ஜூலை, 2014

முள்ளிவாய்க்காலில் அஞ்சலித் திருப்பலி நடத்த பாப்பரசரிடம்


தமிழ் சிவில் அமையம் வேண்டுகோள்!   
பாப்பரசரின் இலங்கை விஜயத்தை தமது அரசியல் தேவைகளுக்கு அரசு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ள தமிழ் சிவில் சமூக அமையத்தினர், அத்தகைய தோற்றத்தை முறியடிப்பதற்காக பாப்பரசர் தமது விஜயத்தின் போது வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். அல்லது முள்ளிவாய்க்காலுக்கு அல்லாவிடின் குறைந்த பட்சம் மடு தேவாலயத்தில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவாகத் திருப்பலி ஒன்றை பாப்பரசர் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
   தமிழ் சிவில் சமூக அமையத்தினர் கடந்த ஜூலை 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இலங்கைக்கான வத்திக்கான் பிரதிநிதி பேராயர் பியரி ந்யுகேன் வான் டாட் (Archbishop Pierre Nguyen Van Tot) ஐ சந்தித்து புனித பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பாக கலந்துரையாடிமையோடு இவ்விடயம் தொடர்பில் பாப்பரசருக்கு கடிதம் ஒன்றையும் வத்திக்கான் பிரதிநிதி ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாப்பரசரின் விஜயம் அரசாங்கத்தால் தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதைப் பற்றி தமிழ் சிவில் சமூக அமையத்தினர் பாப்பரசரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பாப்பரசரின் விஜயம் அரசுக்கு சார்பாக மாற்றப்படுவதை முறியடிப்பதற்காக பாப்பரசர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என்றும் - குறிப்பாக முடிந்தால் முள்ளிவாய்க்கால் அல்லாவிடின் குறைந்த பட்சம் மடு தேவாலயத்தில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவாக திருப்பலி ஒன்றை பாப்பரசர் நடத்த வேண்டும் என்றும் - தமிழ் சிவில் சமூக அமைய உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கும் போது தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்த வேண்டுமெனவும் சிவில் சமூக அமையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கை அரசாங்கம் இதற்கு செவி சாய்க்கும் என்ற நம்பிக்கையில் இவ்வேண்டுகோளை விடுக்கவில்லை என தெளிவுபடுத்தியிருக்கும் தமிழ் சிவில் சமூக அமையத்தினர், எனினும் பாப்பரசர் இவ்விடயங்களைப் பற்றி இலங்கை ஜனாதிபதியிடம் பேசுவது இவ்விடயங்களுக்கு சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுத் தரக் கூடியது என்பதாலேயே தாம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றனர் எனவும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மற்றைய செய்திகள்