ஞாயிறு, 24 மார்ச், 2013

தாய்நாட்டின் நாளிதழ்கள் வாங்குவதை,,,


புதிய போப்பாக பொறுப்பேற்றுள்ள பிரான்சிஸ், தன் சொந்த நாடான அர்ஜென்டினாவில் இருந்து வெளியாகும் நாளிதழை வாங்க மறுத்து விட்டார்.இது குறித்து, அர்ஜென்டினாவில் உள்ள நாளிதழ் விற்பனையாளர், டேனியல் டெல் ரெக்னோ கூறியதாவது:புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கார்டினல்கள் கூட்டத்துக்காக, வாடிகனுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன், எங்களை தொடர்பு கொண்ட, ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ (போப் பிரான்சிஸ்), "தினமும் அர்ஜென்டினா நாட்டு நாளிதழை அனுப்ப வேண்டும்” என, கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இம்மாதம், 18ம் தேதி, என்னை தொலைபேசியில் அழைத்த அவர், "நாளிதழை அனுப்ப வேண்டாம்” என, கூறினார்.
நான் முதலில் நம்பவில்லை. அவரைப் போல வேறு யாரோ பேசுகிறார் என, நினைத்தேன்.ஆனால், "உண்மையாகவே, போப் பிரான்சிஸ் தான், ரோமிலிருந்து பேசுகிறேன்” என, அவர் கூறினார். இதை கேட்டதும், நான் அழுது விட்டேன். என்ன சொல்வது என, தெரியவில்லை.இவ்வாறு, டேனியல் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக