செவ்வாய், 7 அக்டோபர், 2014

புனித பரிசுந்த பாப்பரசர் பிரான்சிஸ் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு!!

புனித பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை மகிந்த ராஜபக்ச சந்திந்துள்ளார். இன்று வத்திக்கானில் அமைந்துள்ள பாப்பரசரின் வாசல் ஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பில் 2015ஆம் ஆண்டுக்கான பாப்பரசரின் வருகைக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை மகிந்த ராஜபக்ச பாப்பரசரிடம் கையளித்துள்ளார்.

இதேநேரம் பாப்பரசருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பாப்பரசரின் இலங்கைப் பயணம், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாப்பரசரின் இலங்கைப் பயணம் நீதியையும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக உழைப்பவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசருடனான சந்திப்பில், மகிந்த தம்பதிகளுடன், தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளியுறவு அமைச்சின் கண்காணிப்புக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுபினர் சஜின் வாஸ் குணவரதன, எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடா ஜோன் அமரதுங்க ஆகியோரும் கத்தோலிக்க அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.


இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக