சனி, 22 நவம்பர், 2014

தேர்தல் அறிவிப்பு - கத்தோலிக்கத் திருச்சபை ஏமாற்றம்!

பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருகை தரும் தினத்துக்கு நெருக்கமான நாளில், ஜனாதிபதி தேர்தல் தினம் குறிக்கப்படும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பதுளை பேராயர் வணக்கத்துக்குரிய வின்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாப்பரசர் வருகையின் 10 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.குறித்த 10 நாட்களுக்குள் நாட்டில் இயல்பு ஏற்படும் என்ற அடிப்படையிலேயே இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. எனினும் தேர்தல் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு குறித்து வத்திக்கான் கவனம் செலுத்தியுள்ளது. ஏற்கனவே பாப்பரசரின் விஜயம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப வத்திக்கானின் இறுதித் தீர்மானம் வெளியிடப்படும் என்று பதுளை பேராயர் குறிப்பிட்டுள்ளார் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக