புதன், 24 ஜூலை, 2013

முக்கிய பதவியில் ஓரினச்சேர்க்கையாளரை அமர்த்திய போப்


ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மதகுரு ஒருவருக்கு வத்திக்கானில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் வாராந்த சஞ்சிகை ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது.
பட்டிஸ்டா றிக்கா எனும் குறித்த மதகுரு உருகுவேயிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் பணிபுரியும்போது சுவிஸ் நாட்டை சேர்ந்த பாதுகாவலர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும் இவ்வாறான ஒருவரை வத்திக்கானில் முக்கிய பதவியில் அமர்ததுவது அவமானம் எனவும் அச்சஞ்சிகை மேலும் சாடியுள்ளது.
இதேவேளை வேறு பலருடனும் தவறான உறவுகள் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்படும் பட்டிஸ்டாவை குறித்த பதவியில் போப் பிரான்ஸிஸே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.