ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு"

கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே உள்ள இந்த தீவில் இருநாட்டவர்களும் கலந்து கொள்வார்கள். தமிழகத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். இதற்காக, இராமேஸ்வரத்தில் இருந்து 81 விசைப்படகுகள் மற்றும் 33 நாட்டுப்படகுகளில் பக்தர்கள் கிளம்பிச் சென்றனர். படகுகளில் பயணம் செய்யும் அனைவருக்கும் உயிர்காக்கும் சாதனங்கள் அணிவிக்கப்பட்டன. காவல்துறை மற்றும் சுங்கத்துறையினரின் பலத்த சோதனைக்கு பின்னரே அனைவரும் கச்சதீவு செல்ல அனுமதிக்கப்பட்டனர். விழாவினை யாழ்ப்பாணம் ஆயர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.( காணொளி இணைப்பு)

சனி, 23 பிப்ரவரி, 2013

மாதாவின் பாடல் காணொளி ,,

சூரிச் அருள் தாய் பெலன் பேர்க் மாதாவினஅருள் ஆசி வேண்டி இந்த பாடல் காணொளி வடி வாக வெளியீடு அனைவர்க்கும் சமர்ப்பணம்,,,,,,