வியாழன், 26 டிசம்பர், 2013

சிரியா தொடர்பில் பாப்பரசர் எச்சரிக்கை

சிரியாவுக்கான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்குமாறு, பாப்பரசர் பிரான்ஸிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வத்திக்கானில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இடம்பெறுகின்ற மோதல்கள் சமாதானமாக நிறைவடைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்க முற்படும் அகதிகளுக்கு எதிராக, வன்முறைகளும், பாரபட்சமும் காட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

புதன், 25 டிசம்பர், 2013

அன்பு, கருணையை உலகிற்கு போதித்த இறைதூதர் இயேசு பிறந்த தினம்

அன்பு, கருணையை உலகிற்கு போதித்த இறைதூதர் இயேசு பிறந்த தினம்
அன்பின் நாயகன் ஏசு பிரான் அவதரித்த திருநாளான கிறிஸ்துமஸ் தினம் இன்று உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித இனத்தின் பாவங்களுக்கு விடியலாக, உலகெங்கும் அன்பு தழைக்க அவதாரமாக கடவுள் தன் மகனை பூமிக்கு அனுப்பிய திருநாள் இந்த தினம்.
உலகெங்கும் உள்ள மக்கள் மத மாச்சர்யங்களைத் தாண்டி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் பொதுவிழாவாக, கிறிஸ்துமஸ் இன்றைக்கு மாறி வருகிறது.
இறைமகன் ஏசு பிரான் அவதரித்த புண்ணியத் தலமான பெத்லகேமில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொட்டும் பனியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.
ஏசு பிறந்த இடத்துக்குச் சென்று தொழுதனர். கிறிஸ்தவர்களின் தலைமைப் பீடமான வாடிகனில், போப் ஆண்டவர் தலைமையில் நள்ளிரவுப் பிரார்த்தனை நடந்தது.







 

செவ்வாய், 24 டிசம்பர், 2013

இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்


 
எமது அன்புவாசகர்அனைவர்க்கும் எனது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம்  http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் மற்றும் கிளை
இணையங்கள்சார்பாக உள்ளம்கனிந்த
. இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.