கணவனும். மனைவியும் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது குறித்து கிறிஸ்தவம் சொல்வதைக் கேளுங்கள்.
* திருமண ஆராதனைக்கு
ஆலயமணி ஒலித்த நாளன்று இருந்த அதே ஆழ்ந்த, கனிவான அன்பும், ஒருவருக்கொருவரான கரிசனையும் தொய்வின்றி தொடர வேண்டும்.
* ஒருவருக்கொருவர் நண்பர்களைப் போல நகைச்சுவை உணர்வோடு பழக வேண்டும்.
* ஒருவருக்கொருவர் நற்பண்போடும், பரிவோடும் இருக்க வேண்டும்.
* கர்த்தர் கொடுத்த சுதந்திரமாகிய பிள்ளைகளை இருவரும் இணைந்து, அவருக்குப் பிரியமாக வளர்த்து அவரிடத்தில் ஒப்புவிக்க வேண்டுமென்ற கரிசனை வேண்டும்.
* தங்களுக்கு கொடுக்கப்பட்ட அன்றாட உணவுக்காக அவ்வப்போது நன்றி சொல்வதும், வேதவாசிப்பிற்கும் ஜெபத்திற்கும் என்று நேரத்தை ஒதுக்கி செயல்பட வேண்டும்.
* ஒருவரையொருவர் அதைரியப்படுத்துகிற வார்த்தைகளைப் பேசவே கூடாது.
* ஆலய ஆராதனையில் உண்மையோடு கலந்து கொள்ள வேண்டும். சபையிலும், கிறிஸ்துவின் ராஜ்யத்தின் விரிவாக்கப்பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
* உறவினர்களுடைய தலையீடின்றி, பிரச்னைகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
* குடும்ப நிதிநிலவரங்களை நன்றாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப ஒருவருக்கொருவர் இசைந்து கையாள வேண்டும்.
* கிறிஸ்துவுக்கு தங்கள் குடும்பத்தை அர்ப்பணிக்க வேண்டும். அவருடைய போதனைகளை சுயநலமின்றி, உண்மையோடும் அன்போடும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இத்தகைய கணவன் மனைவியே பாக்கியவான்கள்







எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 



0 கருத்துகள்:
கருத்துரையிடுக