ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வாடிகன் வங்கிக் கணக்கை மேற்பார்வையிடும் ?


அயல்நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படும் ஐந்து கர்தினால்கள் மூலம் வாடிகன் நகரின் வங்கிக் கணக்கு மேற்பார்வையிடப்படுகின்றது.
இதற்கென அவர்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை(ரூ. 18 லட்சம்) ஊதியமாக வழங்கப்படுகின்றது.
போப் பிரான்சிஸ் பதவி ஏற்ற நாளிலிருந்து தேவாலயத்தின் நிர்வாகங்களில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கினார். கடந்த வருடம் ஐரோப்பிய வங்கிகளின் ஒழுங்காணையம், வாடிகன் வங்கி பண நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அறிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தற்போது போப் பிரான்சிஸ் இந்த வங்கியினை மேற்பார்வையிடும் ஐந்து கர்தினால்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகையை நிறுத்தக் கூறியுள்ளார்.
இதுதவிர, சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி சேமிப்பு பணத்தை கடனுக்குத் தருவதை தார்மீகமாக எதிர்க்கும் சட்டதரனி ஒருவரை நியமித்து அவர்மூலம் இந்தப் போக்கினை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலை தயாரிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு வாடிகன் வங்கி இதுபோன்று அளித்த கடன் உதவிகளில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அப்போதைய தலைவராக இருந்த எட்டோர் கோட்டி டெடிஸ்சி( Ettore Coty tetisci) தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக