புதன், 25 டிசம்பர், 2013

அன்பு, கருணையை உலகிற்கு போதித்த இறைதூதர் இயேசு பிறந்த தினம்

அன்பு, கருணையை உலகிற்கு போதித்த இறைதூதர் இயேசு பிறந்த தினம்
அன்பின் நாயகன் ஏசு பிரான் அவதரித்த திருநாளான கிறிஸ்துமஸ் தினம் இன்று உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித இனத்தின் பாவங்களுக்கு விடியலாக, உலகெங்கும் அன்பு தழைக்க அவதாரமாக கடவுள் தன் மகனை பூமிக்கு அனுப்பிய திருநாள் இந்த தினம்.
உலகெங்கும் உள்ள மக்கள் மத மாச்சர்யங்களைத் தாண்டி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் பொதுவிழாவாக, கிறிஸ்துமஸ் இன்றைக்கு மாறி வருகிறது.
இறைமகன் ஏசு பிரான் அவதரித்த புண்ணியத் தலமான பெத்லகேமில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொட்டும் பனியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.
ஏசு பிறந்த இடத்துக்குச் சென்று தொழுதனர். கிறிஸ்தவர்களின் தலைமைப் பீடமான வாடிகனில், போப் ஆண்டவர் தலைமையில் நள்ளிரவுப் பிரார்த்தனை நடந்தது.







 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக