பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என அனுராதபுரம் பேராயர் நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி பதற்ற நிலைமை தணிவதற்கு முன்னதாக பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது எந்தளவிற்கு பொருத்தமானது என்பதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த உடனேயே பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது.
பேராயர் சபையில் அங்கம் வகிக்கும் பல பேராயர்களின் நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.
சில அரசியல்வாதிகள் பாப்பாண்டவரின் படத்தை ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>







எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 



0 கருத்துகள்:
கருத்துரையிடுக