வெள்ளி, 16 ஜனவரி, 2015

பாப்பரசர் சர்வ மதத் தலைவர்களுடன் சந்திப்பு!

இலங்­கைக்கு நேற்று வந்­த­டைந்த பரி­சுத்த பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் திருத்­தந்தை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்டபத்தில் இலங்­கையின் சர்­வ­மத தலை­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். பௌத்த, இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மத தலை­வர்கள் பாப்­ப­ர­ச­ரு­ட­னான இந்த சந்­திப்பில் கலந்­து­ கொண்­டனர்.

மாநாட்டு மண்­ட­பத்­துக்கு வந்த பாப்­ப­ர­சரை மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிகழ்வு நடை­பெற்ற இடத்­துக்கு அழைத்துச் சென்றார். பாப்­ப­ர­ச­ருக்கு செங்­க­ம்­பள வர­வேற்­ப­ளிக்­கப்­பட்டு அழைத்துச் செல்­லப்­பட்டார். அத்­துடன் நிகழ்வில் இந்து மதத்தின் சார்பில் உரை­யாற்­றிய சிவ­சிறி மகா­தேவ குருக்கள் உரை­யாற்றி முடிந்­ததும் பாப்­ப­ர­ச­ருக்கு பொன்­னாடை போர்த்தி கௌர­வித்தார். நாட்டின் அனைத்து மதங்­க­ளி­னதும் பிர­தி­நி­திகள் இந்த சர்­வ­மத மாநாட்டில் கலந்­து­கொண்­டனர். முதலில் பௌத்த மதத்தின் சார்பில் கம்­பு­று­க­முவே வஜிர தேரர் உரை­யாற்­றினார்.

இந்து மதத்தின் சார்பில் உரை­யாற்­றிய சிவ­சிறி மகா­தேவ குருக்கள், இலங்கை தாய்­தி­ரு­நாட்­டுக்கு பாப்­ப­ரசர் வருகை தந்­ததன் மூலம் பாரிய மகிழ்ச்சி ஏற்பட்­டுள்­ளது என்றும் உங்கள் வருகை இந்த நாட்­டுக்கு சமா­தா­னத்­தை­யும் அமை­தி­யையும் கொண்­டு ­வ­ரட்டும். நீங்கள் உலக சமா­தான தூது­வ­ராக வந்­துள்­ளமை மகிழ்ச­சி­ய­ளிக்கும் விட­ய­மாகும். எனவே உங்­க­ளுக்கு நன்றி கூறி வாழ்த்­து­வ­துடன் பல்­லாண்­டு­காலம் வாழ வாழ்த்­து­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

முஸ்லிம் சம­யத்தின் சார்பில் அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபையின் ஊடக பிரிவின் செய­லாளர் அஷ் ஷெய்யிக் பாசில் பாரூக் உரை­யாற்­று­கையில், அண்­மையில் பிரான்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற இடங்­களில் இடம்­பெற்ற தாக்­குதல் நட­வ­டிக்­கை­களை நாங்கள் எதிர்க்­கின்றோம். இஸ்லாம் மதம் அன்பை போதிக்­கின்­றது. எனவெ இந்த இடத்தில் ஒரு கோரிக்­கையை விடுக்­கின்றேன். அதா­வது மத தலை­வர்கள் ஒன்­றி­ணைய­ வேண்டும் என்று இந்த இடத்தில் கோரு­கின்றோம். நாம் ஒவ்­வொ­ரு­வரும் எமது நம்­பிக்­கை­களை புரிந்­து­ கொள்­ள ­வேண்டும். அந்த வகையில் பாப்­ப­ர­சரின் இலங்கை விஜ­ய­மா­னது இந்த நாட்டின் ஒரு உறவுப் பால­மா­கவும் சக­வாழ்­வுக்­கான விட­ய­மா­க­வும் அமையும் என்று எதிர்­பார்க்­கின்றோம் என்றும் குறிப்­பிட்டார். மேலும் அங்­லிக்கன் திருச்­ச­பையின் பேரா­யரும் இந்த நிகழ்வில் உரை­யாற்­றினார்.

அந்த சந்திப்பையடுத்து பாப்பரசரின் நேற்றைய நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. பாப்பரசர் வத்திக்கான் தூதரக இல்லத்தில் நேற்று இரவு தங்கினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக