புதிய போப்பாக பொறுப்பேற்றுள்ள பிரான்சிஸ், தன் சொந்த நாடான அர்ஜென்டினாவில் இருந்து வெளியாகும் நாளிதழை வாங்க மறுத்து விட்டார்.இது குறித்து, அர்ஜென்டினாவில் உள்ள நாளிதழ் விற்பனையாளர், டேனியல் டெல் ரெக்னோ கூறியதாவது:புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கார்டினல்கள் கூட்டத்துக்காக, வாடிகனுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன், எங்களை தொடர்பு கொண்ட, ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ (போப் பிரான்சிஸ்), "தினமும் அர்ஜென்டினா நாட்டு நாளிதழை அனுப்ப வேண்டும்” என, கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இம்மாதம், 18ம் தேதி, என்னை தொலைபேசியில் அழைத்த அவர், "நாளிதழை அனுப்ப வேண்டாம்” என, கூறினார்.
நான் முதலில் நம்பவில்லை. அவரைப் போல வேறு யாரோ பேசுகிறார் என, நினைத்தேன்.ஆனால், "உண்மையாகவே, போப் பிரான்சிஸ் தான், ரோமிலிருந்து பேசுகிறேன்” என, அவர் கூறினார். இதை கேட்டதும், நான் அழுது விட்டேன். என்ன சொல்வது என, தெரியவில்லை.இவ்வாறு, டேனியல் கூறினார்.












எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 


