வியாழன், 13 மார்ச், 2014

உற்சவத்தில் 3500 இந்தியர்கள் கலந்து கொள்கின்றனர்:

 கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடந்த திருவிழாவில் 3500 இந்திய கத்தோலிக்கர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடந்த உற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ள 3500 இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த விண்ணப்பங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த கத்தோலிக்க பக்தர்களுடன் இலங்கையை சேர்ந்த கத்தோலிக்க பக்தர்களும் பெருமளவில் தேவாலய உற்சவத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
கச்சதீவில் நடைபெறும் வருடந்த உற்சவத்திற்கு தேவையான சகல வசதிகளையும் கடற்படையினர் வழங்க உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக