சனி, 15 மார்ச், 2014

கச்சதீவுக்கான பயண ஒழுங்கு இன்று முதல்

 கச்சதீவு புனித அந்தோனியார்  ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான பயண ஒழுங்குகள் இன்று தொடக்கம் மேற் கொள்ளப்பட்டுள்ளன.   கச்சதீவு புனித அந்தோனி யார் ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவின் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு  நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளது. அதற்காக இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து செல்லும் யாத்திரிகர்களுக்கான பயண ஒழுங்குகள் அந்ததந்தப் பகுதிகளில் இருந்து ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளன.   இலங்கையில் இருந்து செல்லும் பக்தர்களுக்காக குறி காட்டுவானில் விசேட படகுச் சேவைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. குறிகாட்டுவானில் இருந்து காலை 6 மணி தொடக்கம்  ஆரம்பமாகும் படகுச் சேவைகள், 2 மணித் தியாலத்துக்கு ஒருதடவை என்ற அடிப்படையில் தொடர்ந்து  இடம்பெறும்.   திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் சுற்றுப்புறச் சூழலில் சகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக