ஆயர்களிடம் பாப்பரசர் வேண்டுகோள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வத்திக்கானில் வைத்து இலங்கை ஆயர்கள் குழுவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை பெரும் இனவேறுபாடு உடைய நாடு இல்லை என இதன்போது குறிப்பிட்ட அவர், ஆனால் வெவ்வேறு சமயம் மற்றும் மரபுகளை உடையது என சுட்டிக்காட்டியுள்ளார். தனியொரு மத அடையாளத்தை உறுதி
செய்யும் நோக்கிலான தவறான அர்த்தங்களை ஊக்குவிக்கும் சிலரே அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மதபேதங்கள் தேசிய அமைதியை சீர்குலைக்கும் இதனால் ஆயர்கள் அமைதியான சூழலை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரியுள்ளார்.







எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 



0 கருத்துகள்:
கருத்துரையிடுக