இலங்கையில் சமயப்பணியாற்றிய 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கியுசெப்பி பாஸ் என்ற போதகருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் நேற்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர், போதகர் கியுசெப்பி பாஸ். 17–ம் நூற்றாண்டை சேர்ந்த இவர் கோவாவில் பிறந்து, இலங்கையில் கத்தோலிக்க சமயப்பணி ஆற்றினார்.
இவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு விதிகளை மீறி போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று ஒப்புதல் வழங்கினார்.
பொதுவாக முதலில் முக்திப்பேறு அளிப்பதற்கு ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். புனிதர் பட்டம் வழங்குவதற்கு மேலும் ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். இந்த அற்புதங்களை அங்கீகரித்து போப் ஆண்டவர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிப்பார். இதுதான் நடைமுறை.
ஆனால் புனித 23–ம் ஜானுக்கு வழங்கியது போன்று 2–வது அற்புதம் இன்றியே கியு செப்பி பாஸ்க்கு புனிதர் பட்டம் வழங்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒப்புதல் வழங்கி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிற போது கியு செப்பி பாஸ்க்கு, போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி அர்ச்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது







எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 



0 கருத்துகள்:
கருத்துரையிடுக