புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை நடக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் இருந்து இலங்கை வந்த மூன்று பிரதிநிதிகள் இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அகியோர் அடங்கிய அரசாங்க குழுவினரை சந்தித்துப் பேசிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஆயர் சுவாம்பிள்ளை கூறினார்.
உண்மையில் பாப்பரசரின் விஜத்தில் இலங்கை அரசாங்க தரப்பினர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததை இந்த சந்திப்பின் போது தாம் உணரக் கூடியதாக இருந்ததாக கூறிய ஆயர், அந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஜனவரி மாத முதல் வாரத்தில் இங்கையின் ஜனாதிபதி தேர்தல் நடக்கலாம் என்ற வகையில் செய்திகள் வரும் நிலையில், அப்படியாக நடந்தால் திருச்சபைக்கு அதில் ஆட்சேபம் ஏதும் கிடையாதா என்று கேட்டதற்கு பதிலளித்த ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, தேர்தல் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லையாயினும், எந்த சூழ்நிலையிலும் பாப்பரசரின் விஜயத்துக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்க தரப்பினர் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.







எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 



0 கருத்துகள்:
கருத்துரையிடுக