வியாழன், 23 ஏப்ரல், 2015

இயேசுக் கிறிஸ்து அதிசய குழந்தை!! சிலுவை காயங்களுடன்

இயேசுக் கிறிஸ்து அதிசய குழந்தை!! சிலுவை காயங்களுடன்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்த குழந்தை ஒன்று கைகள் மற்றும் பாதங்களில் சிலுவை காயங்களுடன் பிறந்திருப்பது
 பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸின் குவென்சன் நகரில் கடந்த மார்ச் 15ஆம் திகதி குழந்தை ஒன்று கைகள் மற்றும் பாதங்களில் தழும்புகளுடன் பிறந்தது.
இந்த தழும்புகளை உற்று கவனித்த போது அது இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த போது இருந்த தழும்புகளை ஒத்ததாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்தோடு குழந்தையின் நெற்றியிலும் முள், கிரீடம் வைக்கப்பட்டிருந்தது போலான தழும்பு காணப்பட்டது.
இந்த செய்தி மருத்துவமனை எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி அறிந்த கிறிஸ்தவர்கள் சிலர் இந்த குழந்தை இயேசு கிறிஸ்துவின் அடுத்த பிறவி என்று குறிப்பிட்டனர். சிறுது நேரத்தில், குவென்சென் நகரம் முழுவதும் இந்த செய்தி பரவியது.

இதனை அடுத்து, கிறிஸ்துவ நம்பிக்கையாளர்கள் பலர் ஒன்று திரண்டு, ஜெஹோமர் கேஸ்டெலியோ என்ற பெயர் வைக்கப்பட்டிருந்த அந்த அதிசய குழந்தையை வந்து பார்த்தனர்.
மேலும், 1000க் கணக்கானோர் மருத்துவமனையில் குழுமி, பூமிக்கு மீண்டும் வந்ததற்கு நன்றி என்றும், வருக ஜெஹோமர் என்றும் கூறி பிரார்த்தனைகள் செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து இந்த அதிசயக் குழந்தை குறித்து பல கருத்துக்கள் உலவத் தொடங்கின. இந்த குழந்தை இயேசுவின் அவதாரம் என்று ஒரு சாரரும், இந்த குழந்தையை இயேசுதான் அனுப்பினார் என்றும், தன்னை மறந்து விடக் கூடாது என்பதற்காக இந்த தழும்புகளை வைத்திருப்பதாக ஒரு சாரரும் கூறினர்.இது குறித்து,மருத்துவர், மெர்லின் குரூஸ் கூறுகையில்,

குழந்தை பிறக்கும் போதே புர்புரா  என்ற ஒருவகை குறைபாட்டுடன் பிறந்ததாக தெரிவித்தார்.
இந்த உடலில் உள்ள இரத்தம் ரத்த நாளங்களில் இருந்து வெளியேறி தோல் வழியாக வெளியில் தெரிவது தான் இந்த புர்புரா என்றும ஆனால் இந்த குழந்தை விஷயத்தில் அது எப்படி சரியாக, கைகள், பாதங்கள் மற்றும் நெற்றியில் சரியாக அமைந்தது என்பது விசித்திரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதே வேளை குழந்தையை உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தெய்வீகக் குழந்தையாகவே பார்க்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 26 ஜனவரி, 2015

தமிழர் முன்னேற்றக் கழக பிரதிநிதிகள் ஆயர் சந்திப்பு.!!

தமிழர் முன்னேற்றக் கழகம் கடந்த 2015-01-21ந் திகதியன்று மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துகுரிய இராஜப்பு ஜோசப் அவர்களுடன் தமிழ் மக்களின் கலை, கலாசார, அரசியல் இமற்றும் வாழ்வாதார உரிமைகள் பற்றிய கலந்துரையாடலொன்றை மேற்க்கொண்டிருந்தது.
குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் தமிழர் முன்னேற்றக் கழகத்தினுடைய சமூக நலத் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழர் முன்னேற்றக் கழக பிரதான அமைப்பாளர் வி.ஜனகனால் ஆயருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் இக் கலந்துரையாடலில் பிரதானமாக இரண்டு விடயங்கள் கலந்தலோசிக்கப்பட்டன. முதலாவதாக போருக்குப் பின்னரான குறித்த 5 வருட காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம், மனோநிலை என்பன மீள் கட்டி எழுப்பபட வேண்டியதாகும் அனால் குறித்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நலத் திட்டங்களோ. விழிப்புணர்வு நடவடிக்கைகளோ இதுவரையில் குறித்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
தமிழர் முன்னேற்றக் கழகமானது கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற போரினால் பாதிப்படைந்த பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்வாதராத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமங்கள் தோறும் சென்று அவ் மக்களுடன் நெருக்கமாக கலந்துரையாடி இஅவ மக்கள் எப்போதும் பிறரின் உதவியினை எதிர்பார்த்து கையேந்தும் நிலைமையிலிருந்து மீட்சியடைந்து.
தங்களைத் தாங்களே சுயமாக முன்னேற்றிக் கொள்வதன் மூலமாக நல்லொதொரு முன்னேற்றத்தை அடையக் கூடிய திட்டங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி இஅவற்றைத் தொடர்ச்சியாக செயற்படுத்த குறித்த கிராமங்களில் கிராமிய அமைப்பொன்றை உருவாக்கி அவ்வூரில் உள்ள மக்களையே அதன் செயற்பாட்டாளர்களாக நியமித்து அவர்களின் மேம்பட்டுக்காக கை கொடுத்து வருகின்றது.
மேலும் குறித்த பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்கு கை கொடுப்பதன் மூலம் அவ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் இதனடிப்படையில் 100 000 மாணவர்களின் கல்விக்கு கைகொடுப்போம் என்ற தமிழர் முன்னேற்றக் கழகத்தின் 2015 ஆம் ஆண்டின் கருத்திட்டத்திற்கமைவாக இகுறித்த மாவட்டங்களில் உள்ள 2500 மாணவர்களிற்கு அப்பியாசக் கொப்பிகள்
 முதற்கட்டமாக வழங்கப்பட்டன.
தமிழர் முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்திட்டங்கள் தொடர்பில் மேலும் கலந்துரையாடுகையில் அண்மையில் தைப்பொங்கல் தினத்தன்று 15-01-2015 அன்று வெலிக்கடை இவெலிக்கடை -மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை
 மேற்கொண்டிருந்ததோடு அவர்களின் விடுதலை தொடர்பாக பிரதான அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் சந்திரரத்தின பள்ளேகம உட்பட்ட முக்கியமான அலுவலர்களிடம் இகைதிகளின் விடுதலை தொடர்பில் இரு கோரிக்கைகளை முன் வைத்திருந்தது.
முதலாவதாக அரசியலமைப்பின் உறுப்புரை 34 இன் பிரகாரம் பொது மன்னிப்பு அல்லது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி ஒரு வருடத்திற்குட்பட்ட புனர்வாழ்வு நடவடிக்கையின் மூலமாக குறித்த கைதிகளை அவர்களின் குடும்பங்களுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் சிறந்த தீர்வொன்றை குறித்த மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்பதனை உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியதாக ஆயர் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அத்தோடு குறித்த கைதிகளின் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளதோடு தமிழர் முன்னேற்றக் கழகம் குறித்த கைதிகள் தொடர்பாக எடுத்துள்ள இஎடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான ஒரு விசேட கையேடு ஒன்றும் ஆயர் அவர்களிடம் திரு.வி ஜனகன் அவர்களால் கையளிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பில் ஆயர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் குறித்த கைதிகளின் விடுதலை தொடர்பில் தான் பகிரங்கமாக குரல் கொடுத்ததாகவும் தொடர்ச்சியாக தான் அதனைச் செய்யவுள்ளதாகவும் தன்னாலான பாரிய பங்களிப்பு தமிழர் முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளில் பெறும் எனவும் தெரிவித்திருந்தார்.
அத்தோடு தமிழர்களுக்கான உரிமைகளையும் இஉதவிகளையும் பெற்றுகொள்ள அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய அமைப்பொன்று காலத்தின் தேவையாகவுள்ள தென்றும் குறித்த மக்களின் பிரச்சனை தேவைகள் தொடர்பாக மற்றைய பிரதேசங்களில் உள்ள மக்களிடமும் அரசாங்கத்திடமும் சர்வதேச அரங்கில்
 வேறு மொழி பேசும் மக்களிடமோ குறித்த விடயங்களை சரியாகத் தெளிவுபடுத்த சரியான தலைவரொருவர் குறித்த மக்களுக்கு இல்லாதிருப்பதாகவும் தன்னுடைய ஆதங்கத்தினையும் அப்படியானதொரு தலைவர் காலத்தின் தேவையெனவும் ஆயர் அவர்கள் தமிழர் முன்னேற்றக் கழக பிரதான அமைப்பாளரிடம் தெரிவித்திருந்தார்.
குறித்த சந்திப்பில் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பாக உரிய தரப்பினருக்கும் மக்களுக்கும் இடையில் சந்திப்புகளை மேற்கொண்டு தெளிவுபடுத்தவுள்ளதோடு தமிழர் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து சமூக நல செயற்பாடுகளுக்கும் தனது ஒத்துழைப்பினையும் ஆசிர்வாதத்தினையும் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 16 ஜனவரி, 2015

பாப்பரசர் சர்வ மதத் தலைவர்களுடன் சந்திப்பு!

இலங்­கைக்கு நேற்று வந்­த­டைந்த பரி­சுத்த பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் திருத்­தந்தை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்டபத்தில் இலங்­கையின் சர்­வ­மத தலை­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். பௌத்த, இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மத தலை­வர்கள் பாப்­ப­ர­ச­ரு­ட­னான இந்த சந்­திப்பில் கலந்­து­ கொண்­டனர்.

மாநாட்டு மண்­ட­பத்­துக்கு வந்த பாப்­ப­ர­சரை மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிகழ்வு நடை­பெற்ற இடத்­துக்கு அழைத்துச் சென்றார். பாப்­ப­ர­ச­ருக்கு செங்­க­ம்­பள வர­வேற்­ப­ளிக்­கப்­பட்டு அழைத்துச் செல்­லப்­பட்டார். அத்­துடன் நிகழ்வில் இந்து மதத்தின் சார்பில் உரை­யாற்­றிய சிவ­சிறி மகா­தேவ குருக்கள் உரை­யாற்றி முடிந்­ததும் பாப்­ப­ர­ச­ருக்கு பொன்­னாடை போர்த்தி கௌர­வித்தார். நாட்டின் அனைத்து மதங்­க­ளி­னதும் பிர­தி­நி­திகள் இந்த சர்­வ­மத மாநாட்டில் கலந்­து­கொண்­டனர். முதலில் பௌத்த மதத்தின் சார்பில் கம்­பு­று­க­முவே வஜிர தேரர் உரை­யாற்­றினார்.

இந்து மதத்தின் சார்பில் உரை­யாற்­றிய சிவ­சிறி மகா­தேவ குருக்கள், இலங்கை தாய்­தி­ரு­நாட்­டுக்கு பாப்­ப­ரசர் வருகை தந்­ததன் மூலம் பாரிய மகிழ்ச்சி ஏற்பட்­டுள்­ளது என்றும் உங்கள் வருகை இந்த நாட்­டுக்கு சமா­தா­னத்­தை­யும் அமை­தி­யையும் கொண்­டு ­வ­ரட்டும். நீங்கள் உலக சமா­தான தூது­வ­ராக வந்­துள்­ளமை மகிழ்ச­சி­ய­ளிக்கும் விட­ய­மாகும். எனவே உங்­க­ளுக்கு நன்றி கூறி வாழ்த்­து­வ­துடன் பல்­லாண்­டு­காலம் வாழ வாழ்த்­து­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

முஸ்லிம் சம­யத்தின் சார்பில் அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபையின் ஊடக பிரிவின் செய­லாளர் அஷ் ஷெய்யிக் பாசில் பாரூக் உரை­யாற்­று­கையில், அண்­மையில் பிரான்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற இடங்­களில் இடம்­பெற்ற தாக்­குதல் நட­வ­டிக்­கை­களை நாங்கள் எதிர்க்­கின்றோம். இஸ்லாம் மதம் அன்பை போதிக்­கின்­றது. எனவெ இந்த இடத்தில் ஒரு கோரிக்­கையை விடுக்­கின்றேன். அதா­வது மத தலை­வர்கள் ஒன்­றி­ணைய­ வேண்டும் என்று இந்த இடத்தில் கோரு­கின்றோம். நாம் ஒவ்­வொ­ரு­வரும் எமது நம்­பிக்­கை­களை புரிந்­து­ கொள்­ள ­வேண்டும். அந்த வகையில் பாப்­ப­ர­சரின் இலங்கை விஜ­ய­மா­னது இந்த நாட்டின் ஒரு உறவுப் பால­மா­கவும் சக­வாழ்­வுக்­கான விட­ய­மா­க­வும் அமையும் என்று எதிர்­பார்க்­கின்றோம் என்றும் குறிப்­பிட்டார். மேலும் அங்­லிக்கன் திருச்­ச­பையின் பேரா­யரும் இந்த நிகழ்வில் உரை­யாற்­றினார்.

அந்த சந்திப்பையடுத்து பாப்பரசரின் நேற்றைய நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. பாப்பரசர் வத்திக்கான் தூதரக இல்லத்தில் நேற்று இரவு தங்கினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 13 ஜனவரி, 2015

மடுத் திருத்தலத்தில் பாப்பரசரைத் தரிசிக்க இலட்சக்கணக்கான மக்கள்!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வருகை தருவார். பாப்பரசரிடம் ஆசி பெற இலட்சக்கணக்கான மக்கள் மடுத் திருத்தலத்தில் காத்திருக்கின்றனர். இதேவேளை மடுப் பிரதேசத்தில் 3 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து விமானப் படையின் ஹெலிகொப்டரில் மடுத் திருத்தலத்துக்கு வரும் பாப்பரசர் பிற்பகல் 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை மடுமாதா புகழ்ச்சி வழிபாட்டில் பங்குகொண்டு
 மக்களுக்கு இறை ஆசிவழங்குவார். இதன்போது சிறுவர், சிறுமிகள், இளைஞர், யுவதிகள், குருக்கள், அருட்சகோதரிகள், கத்தோலிக்க மக்கள், கத்தோலிக்கர் அல்லாத மக்கள், போரினால் உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் காணாமற்போனோரின் உறவுகளையும் 
பாப்பரசர் சந்திப்பார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 1 ஜனவரி, 2015

மலரும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2015

 களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்அணைத்து இணைப் பார்வையாளருக்கும் இணைய வாழ்த்துக்கள்
1.01.2015ம் ஆண்டை இன்முகத்தோடு வரவேற்க உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கவிருக்கிறது.
மக்களும் மிகுந்த உற்சாகத்துடன், இன்முகத்தோடும், சிறப்பான கொண்டாட்டங்களுடனும் புத்தாண்டை இனிதே வரவேற்க தயாராகி வருகின்றனர்.
நள்ளிரவு 12 மணி ஆனவுடன் , விஸ் யூ ஹேப்பி நியூ இயர் வாழ்த்துக்கள்
.எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்கள் அணைவரையும் வாழ்தி நிற்கிறது  இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
இணையங்கள் சார்பாக எனது உள்ளம்கனிந்த
. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 24 டிசம்பர், 2014

இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் எனது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக இணையங்கள் சார்பாக எனது உள்ளம்கனிந்த . இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது!–


பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என அனுராதபுரம் பேராயர் நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி பதற்ற நிலைமை தணிவதற்கு முன்னதாக பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது எந்தளவிற்கு பொருத்தமானது என்பதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த உடனேயே பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது.
பேராயர் சபையில் அங்கம் வகிக்கும் பல பேராயர்களின் நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.
சில அரசியல்வாதிகள் பாப்பாண்டவரின் படத்தை ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>