வியாழன், 2 மே, 2013

எழுந்து நில் ! விழித்துக் கொள்!


கிருஸ்துவ மதம் முதல் மூன்று நூற்றாண்டுகளில் தன்னை உலகத்திருக்கு தெரிவித்து கொள்வதில்கூட வெற்றி பெற முடியவில்லை. வாள்மூலம் கான்ஸ்டன்டைன் அதற்கு தனது நாட்டில் ஓர் இடம் கொடுத்து நாள்முதல் ஆன்மிக அல்லது லெளகீக நாகரிக முன்னேற்றத்திற்கு கிற்ஸ்துவ மதம் எதாவது உதவி செய்திருக்கிறதா? பூமி ஒரு சுற்றி வரும் கிரகம் என்று முதன் முதலாக நிருபித்த ஐரோப்பிய அறிஞனுக்குக் கிருஸ்துவ மதம் என்ன பரிசு அளித்தது?
 எந்த விஞ்ஞானியையாவது எப்போதாவது கிருஸ்துவ மதம் அங்கீகரித்துத்திருகிறதா? குற்றவியல் மற்றும் சமூகவியல் சட்டங்கள் , கலை ,வியாபாரம் இவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய கிருஸ்துவ இலக்கியத்தால் முடியுமா? இப்போதும் சர்ச் , மதம் அல்லாத இலக்கியத்தை பரவவிடுவதில்லை.
 தற்க்கால கல்வியையும் விஞ்ஞானத்தை அறிந்த ஒருவன் இன்று உண்மை கிருஸ்துவனாக இருக்க முடியுமா?  புதிய ஏற்பாட்டில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ எந்தக் கலையையோ, விஞ்ஞானத்தையோ புகழ்ந்து ஒரு வார்த்தை கூடக் கிடையாது.
 ஐரோப்பாவின் உன்னதச் சிந்தனையாளர்களான  வால்டர்,டார்வின்,புக்னர்,ப்லமேரியன், விக்டர் போன்ற பலரையும் இன்றைய கிருத்துவர்கள் கண்டனம் செய்யவும் நிந்திக்கவுமே செய்கின்றனர்.
  கிருத்துவர்கள் ஐரோப்பிய யூதர்களை எப்படி நடத்துகிறார்கள்? மத ஸ்தாபனங்கள் நீங்கலாக ஐரோப்பாவின் வேறெந்த துறையும் பைபிள்க்கு சம்மந்தமானவை இல்லை.கிருத்துவ மதத்திற்கு எதிராகவும் பைபிள்க்கு மாறாகவும் ஐரோப்பா ஒவ்வொரு உயர்வையும் அடைந்தது. கிருத்துவ மதம் ஐரோப்பாவில் இன்றும் முன் போலவே வலிமை பெற்றதாக இருக்குமானால் பாஸ்டர்,கோக் போன்ற விஞ்ஞானீகளையெல்லாம் உயிருடன் கொளுத்தியிருப்பார்கள்; டார்வின் போன்றோரை கழுவேற்றியிருப்பார்கள்.
  நவீன ஐரோப்பாவில் கிருத்துவம், நாகரிகம் இரண்டும் வெவ்வேறனாவை. நாகரிகம் தன் நிரந்தர எதிரியான மதத்தை அழிக்கவும், பாதிரி வர்க்கத்தையே வெறுக்கவும், அவர்களின் கைவசமிருக்கின்ற  கல்வி நிறுவனங்களையும் தர்ம ஸ்தாபனங்களையும் பிடுங்கி கொள்ளவும் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.
  அறிவிலிகளான விவசாயிகளின் கூட்டம் இல்லையென்றால், கிருத்துவ மதம் தன் இப்போதைய பரிதாபகரமான நிலையிலும் கூட ஒரு விநாடி இருக்க முடியாது; வேரோடு பிடுங்கபட்டிருக்கும். ஏனெனில் நகரவாசிகளான ஏழைகள் இப்போது சர்ச்சின் பரம விரோதிகள்.
 ஒவ்வொரு கிறிஸ்துவ குழந்தையும் இந்துக்களை ‘இழிந்தவர்கள்’ ‘வெறுக்கத்தக்கவர்கள்’  என்றும், உலகிலே மிகவும் பயங்கரமான பேய்களென்றும் அழைக்கும் படி அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறார்களே, இந்த ஏசுவின் சீடர்களுக்கு இந்துக்கள் என்ன குற்றம் செய்துவிட்டார்கள்?
  கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களை வெறுக்க வேண்டும், அதிலும் முக்கியமாக இந்துக்களை வெறுக்க வேண்டும் என்பதும் ஞாயிற்று கிழமைகளில் பள்ளிச் சிறுவர்களுக்கு கற்பிக்கப்படும் படங்களுள் ஒரு பகுதியாக இடம் பெறுகிறது. ஏனெனில் அந்தக் குழந்தைப் பருவம் முதல் அவர்கள் ஒவ்வொரு காசையும் கிறிஸ்துவ மதப் பிரச்சார அமைப்புக்களுக்கு கொடுக்க வேண்டுமே!
  உண்மைக்காக வேண்டாம், தங்கள் சொந்தக் குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்காகவாவது கிறிஸ்துவப் பாதிரிகள் இதைத் தடுக்கக் கூடாதா? இப்படிப்பட்ட குழந்தைகள் இரக்கமற்ற கொடியவர்களாக வளர்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
  மீளா நரகத்தின் சித்திரவதைகளையும், அங்குக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும், கந்தகக் கற்களையும் பற்றி எவ்வளவு அதிகமாக ஒருவர் சித்தரிக்கிறரோ,அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவ பழமைவாதிகளிடையே உயர்ந்த இடம் பெறுகிறார். அவர்களின் மத மறுமலர்ச்சி பிரச்சாரத்தை கேட்டுவிட்டு எனது நண்பரின் பணிப்பெண் ஒருத்தியைப் பைத்திக்கரா விடுதிக்கு அனுப்ப நேரிட்டது. நரகத்தின் நெருப்பும் அங்குள்ள கந்தகத்தின் சூடும் அவளுக்கு பொறுக்க முடியாமால் போய்விட்டது.
  இந்து மதத்திற்கு எதிராகச் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கும் நூல்களைப் பாருங்கள். கிறிஸ்துவ மதத்தை எதிர்த்து ஓர் இந்து அதே போல்  ஒரு வரி எழுதட்டும், பாதிரிகள் பழிக்குபழியாக நெருப்பைக் கக்கிவிடுவார்கள்.
  எனது நாட்டின் அருமை மக்களே! நான் இங்கு ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கிறேன். ஏறக்குறைய இங்குள்ள சமுகத்தின் மூலைமுடுக்குகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான்: பாதிரிகள் கூறுவதுபோல் நாம் பேய்களும் அல்ல, தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொள்வது போல் அவர்கள் தேவர்களும் அல்ல.

—–சுவாமி விவேகானந்தர்…..

புதன், 24 ஏப்ரல், 2013

ஒரே நாளில் 24 லட்சம் பேர்,.,


போப் பிரான்சிஸ் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டவர்.
இவர், வாட்டிகன் அரண்மனையின் டுவிட்டர் வலைப் பக்கத்தில் இயேசு நாதர் குறித்தும் மேரி மாதா குறித்தும் நேற்று 21 கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இவற்றை ஒரே நாளில் இதுவரை சுமார் 24 லட்சம் மக்கள் வாசித்துள்ளனர்
 

மாதாவின் பாடல் காணொளி ,,,

சூரிச் அருள் தாய் பெலன் பேர்க் மாதாவினஅருள் ஆசி வேண்டி இந்த பாடல் காணொளி வடி வாக வெளியீடு அனைவர்க்கும் சமர்ப்பணம்,,,,,,

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வாடிகன் வங்கிக் கணக்கை மேற்பார்வையிடும் ?


அயல்நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படும் ஐந்து கர்தினால்கள் மூலம் வாடிகன் நகரின் வங்கிக் கணக்கு மேற்பார்வையிடப்படுகின்றது.
இதற்கென அவர்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை(ரூ. 18 லட்சம்) ஊதியமாக வழங்கப்படுகின்றது.
போப் பிரான்சிஸ் பதவி ஏற்ற நாளிலிருந்து தேவாலயத்தின் நிர்வாகங்களில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கினார். கடந்த வருடம் ஐரோப்பிய வங்கிகளின் ஒழுங்காணையம், வாடிகன் வங்கி பண நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அறிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தற்போது போப் பிரான்சிஸ் இந்த வங்கியினை மேற்பார்வையிடும் ஐந்து கர்தினால்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகையை நிறுத்தக் கூறியுள்ளார்.
இதுதவிர, சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி சேமிப்பு பணத்தை கடனுக்குத் தருவதை தார்மீகமாக எதிர்க்கும் சட்டதரனி ஒருவரை நியமித்து அவர்மூலம் இந்தப் போக்கினை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலை தயாரிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு வாடிகன் வங்கி இதுபோன்று அளித்த கடன் உதவிகளில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அப்போதைய தலைவராக இருந்த எட்டோர் கோட்டி டெடிஸ்சி( Ettore Coty tetisci) தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

போப்பாண்டவரின் ஆலோசனை குழுவுக்கு


இத்தாலியில் வத்திக்கான் நிர்வாகத்தை கவனிப்பதற்காக உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்தியாவை சேர்ந்த கார்டினல் ஆஸ்வால்டு கிரேசியாஸ் இடம் பெற்றுள்ளார்.

 8 கார்டினல்கள் அடங்கிய இந்த குழுவை போப்பாண்டவர் நேற்று நியமித்தார். இத்தாலியில் வத்திக்கான் நகரில் போப் தலைமையகம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மததலைவராக போப்பாண்டவர் உள்ளார்.
வத்திக்கான் நகரை போப்பாண்டவரே நிர்வகித்து வருகிறார். வத்திக்கான் நகர் மற்றும் தேவாலய நிர்வாகங்களை கவனிப்பதில் தனக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி முடிவெடுப்பதற்காக ஒரு உயர்மட்டக் குழுவை போப் நியமித்துள்ளார்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 8 கார்தினல்கள் இந்த குழுவில் உள்ளனர். அவர்களில் இந்தியாவை சேர்ந்த கார்டினல் ஆஸ்வால்டு கிரேசியாஸ் ஒருவர்.
தற்போது அவர் மும்பை ஆர்ச் பிஷப்பாக உள்ளார். மேலும், அந்த குழுவில் வத்திக்கான் அரசு நிர்வாக தலைவர் ஜியுசெப்பே பெர்டெல்லோ, சிலே நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்கோ சேவியர். ஜெர்மனியை சேர்ந்த ரீன்கார்டு மார்க்ஸ், காங்கோ நாட்டை சேர்ந்த லாரன்ட் மான்ஸ்வென்கோ, அமெரிக்காவை சேர்ந்த சீன் பேட்ரிக் மாலே, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜார்ஜ் பெல், ஹோன்டுராஸ் நாட்டை சேர்ந்த ஆஸ்கர் ஆன்ட்ரூஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வத்திக்கான் நகர கவுன்சிலின் முதல் கூட்டம் அக்டோபர் 1ம் திகதி முதல் 3ம் திகதிக்குள்ளாக நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்


எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/


ஞாயிறு, 24 மார்ச், 2013

தாய்நாட்டின் நாளிதழ்கள் வாங்குவதை,,,


புதிய போப்பாக பொறுப்பேற்றுள்ள பிரான்சிஸ், தன் சொந்த நாடான அர்ஜென்டினாவில் இருந்து வெளியாகும் நாளிதழை வாங்க மறுத்து விட்டார்.இது குறித்து, அர்ஜென்டினாவில் உள்ள நாளிதழ் விற்பனையாளர், டேனியல் டெல் ரெக்னோ கூறியதாவது:புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கார்டினல்கள் கூட்டத்துக்காக, வாடிகனுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன், எங்களை தொடர்பு கொண்ட, ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ (போப் பிரான்சிஸ்), "தினமும் அர்ஜென்டினா நாட்டு நாளிதழை அனுப்ப வேண்டும்” என, கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இம்மாதம், 18ம் தேதி, என்னை தொலைபேசியில் அழைத்த அவர், "நாளிதழை அனுப்ப வேண்டாம்” என, கூறினார்.
நான் முதலில் நம்பவில்லை. அவரைப் போல வேறு யாரோ பேசுகிறார் என, நினைத்தேன்.ஆனால், "உண்மையாகவே, போப் பிரான்சிஸ் தான், ரோமிலிருந்து பேசுகிறேன்” என, அவர் கூறினார். இதை கேட்டதும், நான் அழுது விட்டேன். என்ன சொல்வது என, தெரியவில்லை.இவ்வாறு, டேனியல் கூறினார்.