ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

பாப்­ப­ரசர் நல்­லதோர் அர­சியல் தீர்­வுக்கு அழைப்பு விடுப்பார்;

 இலங்­கையின் சிறு­பான்மை மக்­க­ளுக்கு நல்­ல­தொரு அர­சியல் தீர்வு வழங்க வேண்­டு ­மென்ற அழைப்­பையும் இலங்கை வரும் பாப்­ப­ரசர் விடுப்பார் என்­பதை நாம் எதிர்பார்க்­கின்றோம்.” இவ்­வாறு மன்னார் ஆயர் இராயப்பு யோசப், திரு­கோ­ண­மலை மறை மாவட்ட ஆயர் கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை, மட்­டக்­க­ளப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்­னையா ஆகியோர் தெரி­வித்­தனர்.
 இலங்­கையில் அமை­தியும் சமா­தா­னமும் வர­வேண்டும். போரினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீட்சி பெற வேண்டும்.
சமா­தானப் பாதையில் இலங்கை செல்ல வேண்­டு­மானால் அர­சியல் தீர்­வுக்­கான வழி­களை அரசு திறந்­து­விட வேண்டும் என்ற கோரிக்­கையை பாப்­ப­ரசர் தனது உரையில் குறிப்­பி­டுவார் என நாம் நம்­பு­கின்­றோ­மென மேலும் அவர்கள் தெரி­வித்­தார்கள்.
 பரி­சுத்த பாப்­ப­ரசர் முதலாம் பிரான்ஸில் திருத்­தந்­தையின் இலங்­கைக்­கான வரு­கையை முன்­னிட்டு கருத்துத் தெரி­வித்த போதே ஆயர் சபையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மூவரும் இவ்­வா­றான கருத்தை தெரி­வித்­தனர்.மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு யோசப் தன கருத்தைத் தெரி­விக்கும் போது பாப்­பாண்­டவர் இலங்­கைக்கு வரு­வது இலங்­கையில் கட­மை­யாற்றி வரும் யோசப் வாஸ் அடி­க­ளா­ருக்கு புனி­தப்­பட்­டதை அளிப்­ப­தற்கும், போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை ஆசீர்­வ­திப்­ப­தற்­கா­க­வு­மாகும்.
 
பாப்­ப­ர­சரின் வருகை எக்­கா­ரணம் கொண்டும் அர­சியல் மய­மாக்­கப்­படக் கூடாது. அத்­த­கை­ய­தொரு சந்­தர்ப்­பமும் உரு­வாக்­கப்­ப­ட­மாட்­டாது. மடு­மாதா தேவா­லயம் சமா­தா­னத்தின் ஒரு­மை­ய­மாக இருந்து வரு­கி­றது. அங்கு வருகை தர­வி­ருக்கும் பாப்­ப­ரசர் வட­கி­ழக்கில் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை அங்கு சந்­தித்து ஆசீர்­வ­திப்­ப­தற்­கா­கவும் அவரின் வருகை அமைய இருக்­கி­றது.
 
அவ்­வே­ளையில் எல்லா மக்­களும் குடும்ப உணர்­வுடன் சகோ­தர வாஞ்­சை­யுடன் ஒன்று கூடி பாப்­ப­ர­ச­ரிடம் ஆசீர்­வாதம் பெற வேண்­டு­மென்­பதே எமது பேரா­சை­யாகும்.
 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக யுத்­தத்­தினால் நேர­டி­யாக மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இந்த மக்­க­ளுக்கு சுபீட்­ச­மான வாழ்­வொன்று கிடைக்கப் பெற வேண்டும். எனவே, பாதிக்­கப்­பட்ட மக்கள் பாப்­ப­ர­சரை சந்­திக்­க­வி­ருப்­பது மாபெரும் வரப்­பி­ர­சா­த­மென்றே கூற வேண்டும். எனவே தான் அவரின் வரு­கையை அர­சியல் மயப்­ப­டுத்தக் கூடாது என எதிர்­பார்க்­கின்றோம்.
 இந்த நாட்டில் நல்­ல­தொரு அர­சியல் சூழ்­நி­லையும் சமா­தான சூழலும் உரு­வாக வேண்­டு­மானால் அர­சாங்கம் உலக நாடு­க­ளுடன் ஒத்­துப்­போக வேண்டும். போரினால் ஏற்­பட்ட வடுக்­களை இல்­லாது ஒழிக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட அப்­பாவி மக்­களின் வாழ்வில் ஒரு மீட்­சியை உரு­வாக்க வேண்­டு­மென்­பதே எமது பேரவா ஆகும்.
 திரு­கோ­ண­மலை மறை மாவட்ட ஆயர் கலா­நிதி கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை தனது கருத்தை தெரி­விக்­கையில்,
கத்­தோ­லிக்க திருச்­ச­பைக்கு தலைமை வகிக்கும் திருத்­தந்தை முதலாம் பிரான்சிஸ் எமது நாட்­டுக்கு வருகை தரு­வது மாபெரும் வரப்­பி­ர­சா­த­மாகும்.
ஒல்­லாந்தர் ஆட்சிக் காலத்தில் கத்­தோ­லிக்க நிறு­வ­னங்கள், ஆல­யங்கள், நிர்­மூ­ல­மாக்­கப்­பட்ட வேளையில் கோவை நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்கள் இலங்­கையில் அளப்­ப­ரிய தொண்டு செய்­தார்கள். மக்கள் அவர்­களின் தொடு­களை ஏற்­றுக்­கொண்­டார்கள். தற்­போது புனித தந்­தை­யென்ற வகையில் அவர் இலங்கை வரு­வது எல்­லோ­ருக்கும் மகிழ்ச்சி தரும் விட­ய­மாகும்.
 யுத்­தத்­தினால் பாதிக்­க­பப்­பட்ட மக்­களை சந்­தித்து அவர்­க­ளுக்கு ஆறுதல் அளிக்­க­வரும் அவரின் வருகை நல்­ல­தொரு மாற்­றத்தைத் தரு­மென்று நம்­பு­கின்றோம். புனித தந்தை நாட்டின் அர­சியல் தலை­வர்­களை மற்றும் சமயப் பெரி­யோர்­களை சந்­தித்து உரை­யா­ட­வுள்ளார்.
 இச்­சந்­திப்பின் போது இத­னூ­டாக நாட்டின் பிரச்­சி­னைக்கு தீர்க்­கப்­ப­டா­துள்ள சிறு­பான்மை மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கும் நல்ல தீர்­வொன்றை வழங்க வேண்­டு­மென்ற அழைப்­பொன்­றையும் விடுவார் என்­ப­தையும் நாம் எதிர்பார்க்­கின்றோம்.
 அவ­ரு­டைய வருகை கத்­தோ­லிக்க கிறிஸ்­தவ மற்றும் ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கும் ஒரு மாபெரும் ஆசிர்­வா­த­மாக இருக்­கு­மென நாம் நம்­பு­கின்றோம் என ஆயர் கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை தெரி­வித்தார்.
 மட்­டக்­க­ளப்பு மறை­மா­வட்ட ஆயர் யோசப் பொன்­னையா கருத்துத் தெரி­விக்­கையில்,
 பாப்­ப­ர­சரின் வரு­கையை மிக நீண்ட கால­மா­கவே இலங்கை மக்கள் எதிர்­பார்த்த வண்ணம் இருக்­கின்­றார்கள். பாப்­ப­ர­சரின் வரு­கையின் போது மூன்று இடங்­களில் தந்தை உரை­யாற்­ற­வுள்ளார்.
 
விமான நிலை­யத்­திலும் இரண்­டா­வது அனைத்து மத சமயத் தலை­வர்­களை சந்­தி்க்­கின்ற வேளை­யிலும், காலி முகத்­தி­டலில் நடை­பெ­ற­வுள்ள திருப்­பலி நிறை­வேற்றும் போதும் உரை­யாற்­றுவார். அத்­துடன், மடு ஆல­யத்தில் பாதிக்­கப்­பட்ட மக்களைக் கண்டு உரையாற்றி ஆசீர்வதிக்கப்பட உள்ளார்.
 
இவற்றுடன் ஜனாதிபதி மற்றும் பல சமயத் தலைவர்களையும் சந்தித்து உரையாடவுமுள்ளார்.
 
அரசாங்கத்திற்கு நல்ல செய்தியை பாப்பரசர் கூறுவார் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். பாப்பரசர் இலங்கையின் எல்லா வகைப் பிரச்சினைகளையும் நன்கு அறிவார்.
 
எனவே, இலங்கையில் நிரந்தர சமாதானமும் அமைதியும் வர பாப்பரசர் ஆசீர்வதிப்பார் என நாம் எதிர்பார்க்கிறோமென ஆயர் பொன்னையா தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 18 செப்டம்பர், 2014

கத்தோலிக்க போதகருக்கு புனிதர் பட்டம்: போப் ஆண்டவர் ஒப்புதல்

 இலங்கையில் சமயப்பணியாற்றிய 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கியுசெப்பி பாஸ் என்ற போதகருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் நேற்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர், போதகர் கியுசெப்பி பாஸ். 17–ம் நூற்றாண்டை சேர்ந்த இவர் கோவாவில் பிறந்து, இலங்கையில் கத்தோலிக்க சமயப்பணி ஆற்றினார்.
இவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு விதிகளை மீறி போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று ஒப்புதல் வழங்கினார்.
பொதுவாக முதலில் முக்திப்பேறு அளிப்பதற்கு ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். புனிதர் பட்டம் வழங்குவதற்கு மேலும் ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். இந்த அற்புதங்களை அங்கீகரித்து போப் ஆண்டவர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிப்பார். இதுதான் நடைமுறை.
ஆனால் புனித 23–ம் ஜானுக்கு வழங்கியது போன்று 2–வது அற்புதம் இன்றியே கியு செப்பி பாஸ்க்கு புனிதர் பட்டம் வழங்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒப்புதல் வழங்கி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிற போது கியு செப்பி பாஸ்க்கு, போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி அர்ச்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 15 செப்டம்பர், 2014

மாதா சொரூபம் இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைப்பு!

 ஏழாலை மேற்கு பகுதியில் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய மாதா சொரூபம் ஒன்று, திங்கட்கிழமை  இரவு இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
கடையொன்றில் சுவருடன் அமைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துடன் செவ்வாய்க்கிழமை  தொடர்புகொண்ட கேட்டபோது, தங்களுக்கு இது தொடர்பில் முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இலங்கைப் பயணம் பாப்பாரசர் பிரான்சிஸ்சின் உத்தியோகபூர்வமாக அறிவித்தது ??!

2015ஆம் ஆண்டு ஐனவரி மாதம் இலங்கைக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் பயணம் செய்வார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன் அவரின் வருகைக்கான உத்தியோகபூர்வ இலட்சினையையம் வெளியிட்டு வைத்தது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

சனி, 30 ஆகஸ்ட், 2014

கொடியேற்றத்துடன் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா:

 தொடக்கம் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
 கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படும்
 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, கொடியேற்றம்
 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 
முன்னதாக திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. 22 அடி நீளமும், 14 அடி உயரமும் கொண்ட புனிதக் கொடி, பேராலய கிழக்குப் பகுதியிலிருந்து பாரம்பரியான பாதைகளில் ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டுப் பேராலயத்தை அடைந்தது. தொடர்ந்து, தஞ்சாவூர் மறைமாவட்ட 
ஆயர் எம். தேவதாஸ் 
அம்புரோஸ் தலைமையில், கொடியைப் புனிதம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ” ஆவே மரியே மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். நாகை 
மாவட்ட ஆட்சியர்
 து. முனுசாமி, தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் சஞ்சய் குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆர். பொன்னி, காளிராஜ் மகேஷ்குமார் உள்ளிட்டோர் வழிபாடுகளில் பங்கேற்றனர். பேராலய அதிபர் ஏ. மைக்கேல் அடிகளார், துணை அதிபர் எஸ்.ஏ. சூசைமாணிக்கம்
, மேலாளர் 
தார்சீஸ்ராஜ் மற்றும் ஆரோக்கியசுந்தரம் உள்ளிட்ட உதவி பங்குத் தந்தையர்கள் வழிபாடுகளை முன்னின்று நடத்தினர். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான 
பக்தர்களும், 
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் திரளான அளவில் விழாவில் பங்கேற்றனர்.சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தீயணைப்பு மீட்புப் படையினர்
 கடற்கரை 
மற்றும் சில பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். பேராலய ஆண்டுவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள்
 இயக்கப்பட்டன.
  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்.
 

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மரணத்தின் ரகசியத்தை கூறிய போப் ஆண்டவர்


pop00
போப் ஆண்டவர் பிரான்சிஸ், தான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ கடவுள் ஆயுள் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 77 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக தென்கொரியா சென்றுவிட்டு, வாடிகன் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் கூறுகையில், எனது

இந்த பயணத்தின் போது மக்களின் பெருந்தன்மை நன்கு தெரிந்தது. நான் எனது பாவங்கள், தவறுகள் குறித்து அறிய முயன்றேன், ஆனால் அதற்காக பெருமைப்படவில்லை. ஏனெனில் நான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன், அதுவரை மட்டுமே கடவுள் எனக்கு ஆயுள்

வழங்கியுள்ளார். நான் போப் ஆண்டவராக தெரிவு செய்யப்பட்டபோது இயற்கையாகவே பிரபலமாக தொடங்கினேன், தொடக்கத்தில் அது எனக்கு ஒருவித பீதியை ஏற்படுத்தியது. 60 அண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க பிஷப்புகள் ஓய்வு பெறுவது என்பது நடைமுறையில் கேள்விப்படாத ஒன்றாக இருந்த நிலையில் தற்போது அது சாதாரணமாகியுள்ளது. எனக்கு முன்பு போப் ஆண்டவர் பொறுப்பில் இருந்த 16–ம் பெனடிக்ட், தொடர்ந்து நீண்ட நாள் பணியாற்ற முடியாது என கருதியதால் அப்பதவியில் இருந்து

ஓய்வு பெற்று அதற்கான கதவை திறந்து விட்டுள்ளார். மேலும், நான் நரம்பு கோளாறினால் மிகவும் அவதிப்படுகிறேன், அதற்காக அர்ஜென்டினாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ அணியினர் எனக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

pop00

சனி, 16 ஆகஸ்ட், 2014

அன்னையின் ஆவணித் திருவிழாவில் திரண்ட ஆறு இலட்சம் மக்கள்!

மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இன்று திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது. கர்தினால் அதிமேதகு மல்கம் ரஞ்சித் ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் மேதகு றேமன் விக்கிரமசிங்க, அநுராதபுர ஆயர் மேதகு நேபட் அன்றாடி ஆண்டகை கொழும்பு இளைப்பாறிய பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் உட்பட இத்தாலியன் ஆயர் மன்றத்தின் பிரதிநிதிகளாக மடுவிற்கு வருகைதந்திருந்த அருட்பணியாளர்கள் மென்சின்நோர் லேனாட் டீ முருகோ, மொன்டினியோ அன்ரனியோ அமராத்தி ஆகிய அடிகளாருடன் நூற்றுக்கு மேற்பட்ட அருட்பணியாளர்களும் திருவிழா திருப்பலியில் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவின் போது மன்னார் மறை மாவட்ட ஆயர் மறை மாவட்ட மக்களுக்கு வருடத்தில் இருமுறை வழங்கும் பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக அன்னையின் பரிந்துரையை வேண்டி வழங்கும் ஆசியுரையை திருச்சபையின் தாய் மொழியாம் இலத்தீனில் மொழிந்தார். இத்திருவிழா திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. இதன் பின் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் திருச்சுரூப ஆசிரும் அங்கு குழுமியிருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து, உணவு, குடிதண்ணீர், சுகாதாரம், தங்குமிடம், நீதிமன்ற ஒழுங்கு போன்ற சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. திருச்சுருப ஆசீர் நிறைவுற்றதும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையும் இலங்கைக்கு வருகைதரவிருக்கும் பரிசுத்த பாப்பரசரின் கொழும்பு, மடு ஆகிய விஜயங்களின்போது நடைபெறவிருக்கும் நிகழ்வுகளை பற்றி கூடியிருந்த மக்களுக்குத் தெரிவித்தனர். இவ்விழாவுக்கு இம்முறை நாட்டின் பலபாகங்களிலுமிருந்து சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் என மடு பரிபாலகர் வட்டம் தெரிவித்தது.