வியாழன், 20 ஜூன், 2013

மீண்டும் வெள்ளத்திற்குள் லூர்து மாதா!



     கடுமையான மழையின் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நேற்று மாலையிலிருந்து  Hautes-Pyrénées இலுள்ள லூர்து மாதா கோயிற் பகுதியிலிருந்த மக்களையும் யாத்ரீகர்களையும் தீயணைப்புப் படையினரும் காவற்துறையினரும் பாதுகாப்பாக வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி உள்ளனர்.
மீண்டும் வெள்ளத்திற்குள் லூர்து மாதா!,,,,கடுமையான மழையின் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நேற்று மாலையிலிருந்து  Hautes-Pyrénées இலுள்ள லூர்து மாதா கோயிற் பகுதியிலிருந்த மக்களையும் யாத்ரீகர்களையும் தீயணைப்புப் படையினரும் காவற்துறையினரும் பாதுகாப்பாக வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி உள்ளனர்
லூர்து மாதா தேவாலயத்திற்குள் 1,4m அளவிற்கு வெள்ளம் பாய்ந்த வண்ணம் உள்ளது. புனிதக் குளியல் குளிக்கும் இடம் முழுவதும் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. மேலேலுயுள்ள தேவாலயம் பூட்டப்பட்டுள்ளது. கடந்த வருடமும் பாரிய வெள்ளத்திற்கு இப்பகுதியும் தேவாலயமும் சிக்கிப் பெருஞ் சேதம் ஏற்பட்டிருந்தது. இயற்கையின் சீற்றத்திற்கு இறைவன் கூட தப்ப முடியாது என்பதையே இது காட்டுகின்றது.
    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக