இந்நாட்டில் மன்னார் ஆயர் மிகவும் விஷம் உடையவர் அவருடன் சேர்ந்து சிறு குழுக்கள் இலங்கையில் தமிழர்களை அரசு கொலை செய்ததாக சர்வதேசங்களுக்கும் கடிதம் எழுதுகின்றார். இவ்வாறான சூழ்ச்சி செய்யும் மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் இவ்வாறு பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொது செயலாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளுக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது மிக பாரதூரமான செயலாகும் இலங்கை .ராஜதந்திரிகள் முறையாக செயல்படாமை இதற்கு காரணமாகும். இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் நமது நாட்டிற்கு ஆபத்தாகிவரும் வேளையில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்புள்ளது. நாம் ஆயுத ரீதியாக புலிகளை அழித்திருந்தாலும் சர்வதேச ரீதியாக புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. வெளிநாடுகளில் நமது ராஜதந்திரிகள் சிறப்புரிமையை அனுபவிப்பது போல் நாட்டின் நலனை கவனிக்கவில்லையென்றும் கூறுகின்றனர்.
எதிர்காலத்தில் முப்படைகளும் உசார் நிலையில் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னார் ஆயர் போன்ற விஷ பாம்புகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம் சில்லறை கடை அல்ல மிக பலம் வாய்ந்த அமைப்பு அது புலிகள் தடையை நீக்கிய சம்பவம் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சி என்று இக்கட்சியின் நிறைவேற்று அதிகாரி டி.விதானகே குறிப்பிடுகின்றார்.











எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 


