செவ்வாய், 7 ஜனவரி, 2014

இன்று.07.14 கிறிஸ்துமஸை கொண்டாடும் மக்கள்



உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் திகதி அன்று கிறிஸ்துமஸை கொண்டாடுகின்றனர்.
ஆனால் கிரிகோரியன் காலண்டரை பின்பற்றும் பழமைவாத கிறிஸ்தவர்கள், இன்று(ஜனவரி 07ம் திகதி) கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர்.

உக்ரைன், ரஷ்யா, ஜார்ஜியா, செர்பியா, ரோமானியா, அல்பேனியா மற்றும் பின்லாந்து நாடுகளில் உள்ள தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.







 



 

புதன், 1 ஜனவரி, 2014

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், 20.14.

2014m
அன்பர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர் அன்புள்ள வாசகர்களுக்கும் உறவு இணையங்களுக்கும் எமது நிலாவரை இணையம் நவற்கிரி இணையங்களின்சார்பாக மலர்ந்த.01-01.2014ஆண்டின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகலசெல்வங்களும் பெற்று . வாழ்க என்றும் நலமுடன் http://lovithan.blogspot.ch/2014/01/2014.html 2014my2014
 
 

வியாழன், 26 டிசம்பர், 2013

சிரியா தொடர்பில் பாப்பரசர் எச்சரிக்கை

சிரியாவுக்கான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்குமாறு, பாப்பரசர் பிரான்ஸிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வத்திக்கானில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இடம்பெறுகின்ற மோதல்கள் சமாதானமாக நிறைவடைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்க முற்படும் அகதிகளுக்கு எதிராக, வன்முறைகளும், பாரபட்சமும் காட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

புதன், 25 டிசம்பர், 2013

அன்பு, கருணையை உலகிற்கு போதித்த இறைதூதர் இயேசு பிறந்த தினம்

அன்பு, கருணையை உலகிற்கு போதித்த இறைதூதர் இயேசு பிறந்த தினம்
அன்பின் நாயகன் ஏசு பிரான் அவதரித்த திருநாளான கிறிஸ்துமஸ் தினம் இன்று உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித இனத்தின் பாவங்களுக்கு விடியலாக, உலகெங்கும் அன்பு தழைக்க அவதாரமாக கடவுள் தன் மகனை பூமிக்கு அனுப்பிய திருநாள் இந்த தினம்.
உலகெங்கும் உள்ள மக்கள் மத மாச்சர்யங்களைத் தாண்டி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் பொதுவிழாவாக, கிறிஸ்துமஸ் இன்றைக்கு மாறி வருகிறது.
இறைமகன் ஏசு பிரான் அவதரித்த புண்ணியத் தலமான பெத்லகேமில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொட்டும் பனியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.
ஏசு பிறந்த இடத்துக்குச் சென்று தொழுதனர். கிறிஸ்தவர்களின் தலைமைப் பீடமான வாடிகனில், போப் ஆண்டவர் தலைமையில் நள்ளிரவுப் பிரார்த்தனை நடந்தது.







 

செவ்வாய், 24 டிசம்பர், 2013

இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்


 
எமது அன்புவாசகர்அனைவர்க்கும் எனது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம்  http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் மற்றும் கிளை
இணையங்கள்சார்பாக உள்ளம்கனிந்த
. இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.



 
 

வியாழன், 14 நவம்பர், 2013

இயேசுவின் அன்பு....ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)


 இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.

நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

மனமொத்த தம்பதியாய் வாழ்வோமே!


கணவனும். மனைவியும் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது குறித்து கிறிஸ்தவம் சொல்வதைக் கேளுங்கள்.
 * திருமண ஆராதனைக்கு

ஆலயமணி ஒலித்த நாளன்று இருந்த அதே ஆழ்ந்த, கனிவான அன்பும், ஒருவருக்கொருவரான கரிசனையும் தொய்வின்றி தொடர வேண்டும்.
 * ஒருவருக்கொருவர் நண்பர்களைப் போல நகைச்சுவை உணர்வோடு பழக வேண்டும்.

 * ஒருவருக்கொருவர் நற்பண்போடும், பரிவோடும் இருக்க வேண்டும்.
 * கர்த்தர் கொடுத்த சுதந்திரமாகிய பிள்ளைகளை இருவரும் இணைந்து, அவருக்குப் பிரியமாக வளர்த்து அவரிடத்தில் ஒப்புவிக்க வேண்டுமென்ற கரிசனை வேண்டும்.

 * தங்களுக்கு கொடுக்கப்பட்ட அன்றாட உணவுக்காக அவ்வப்போது நன்றி சொல்வதும், வேதவாசிப்பிற்கும் ஜெபத்திற்கும் என்று நேரத்தை ஒதுக்கி செயல்பட வேண்டும்.

 * ஒருவரையொருவர் அதைரியப்படுத்துகிற வார்த்தைகளைப் பேசவே கூடாது.
 * ஆலய ஆராதனையில் உண்மையோடு கலந்து கொள்ள வேண்டும். சபையிலும், கிறிஸ்துவின் ராஜ்யத்தின் விரிவாக்கப்பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 * உறவினர்களுடைய தலையீடின்றி, பிரச்னைகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
 * குடும்ப நிதிநிலவரங்களை நன்றாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப ஒருவருக்கொருவர் இசைந்து கையாள வேண்டும்.

 * கிறிஸ்துவுக்கு தங்கள் குடும்பத்தை அர்ப்பணிக்க வேண்டும். அவருடைய போதனைகளை சுயநலமின்றி, உண்மையோடும் அன்போடும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இத்தகைய கணவன் மனைவியே பாக்கியவான்கள்