சனி, 15 மார்ச், 2014

கச்சதீவுக்கான பயண ஒழுங்கு இன்று முதல்

 கச்சதீவு புனித அந்தோனியார்  ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான பயண ஒழுங்குகள் இன்று தொடக்கம் மேற் கொள்ளப்பட்டுள்ளன.   கச்சதீவு புனித அந்தோனி யார் ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவின் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு  நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளது. அதற்காக இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து செல்லும் யாத்திரிகர்களுக்கான பயண ஒழுங்குகள் அந்ததந்தப் பகுதிகளில் இருந்து ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளன.   இலங்கையில் இருந்து செல்லும் பக்தர்களுக்காக குறி காட்டுவானில் விசேட படகுச் சேவைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. குறிகாட்டுவானில் இருந்து காலை 6 மணி தொடக்கம்  ஆரம்பமாகும் படகுச் சேவைகள், 2 மணித் தியாலத்துக்கு ஒருதடவை என்ற அடிப்படையில் தொடர்ந்து  இடம்பெறும்.   திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் சுற்றுப்புறச் சூழலில் சகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 14 மார்ச், 2014

நாளை ஆரம்பம்கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா


இந்திய- இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை கச்சதீவு திருவிழாவிற்காக தமிழகத்திலிருந்து பங்கு கொள்ள 3,460 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.
இமேஸ்வரம் தீவிலிருந்து 12 மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவிலிருந்து 8 மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்ப்பரப்பில் கச்சதீவு அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது.

1983 ஆம் முதன்முதலாக இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சதீவு விழா நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இலங்கையில் உள்நாட்டு போர் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 2002 இல் மீண்டும் கச்சதீவு அந்தோனியார் திருவிழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கச்சதீவு திருவிழா தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 95 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் படகுகளில் 2,972 ஆண்கள், 347 பெண்கள், 141 குழந்தைகள் என மொத்தம் 3,460 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் படகு உரிமையாளர்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. அடையாள அட்டை இன்றி யாரும் கச்சதீவு திருவிழாவிற்கு பயணிக்க முடியாது.

வியாழன், 13 மார்ச், 2014

உற்சவத்தில் 3500 இந்தியர்கள் கலந்து கொள்கின்றனர்:

 கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடந்த திருவிழாவில் 3500 இந்திய கத்தோலிக்கர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடந்த உற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ள 3500 இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த விண்ணப்பங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த கத்தோலிக்க பக்தர்களுடன் இலங்கையை சேர்ந்த கத்தோலிக்க பக்தர்களும் பெருமளவில் தேவாலய உற்சவத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
கச்சதீவில் நடைபெறும் வருடந்த உற்சவத்திற்கு தேவையான சகல வசதிகளையும் கடற்படையினர் வழங்க உள்ளனர்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

மருத்துவமனையில் சுற்றித் திரியும் பேய்……


அதிசயம்ஆனால் இதை நீகள்தான் தீர்மாணிக்கவேண்டும்
இதோ சுற்றித் திரியும் பேய் மருத்துவமனையில் …காணோளி…

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

இளம் ஜோடிகளுக்கு போப் தரும் காதல் டிப்ஸ்(காணோளி, )

வாடிகனில் போப் பிரான்ஸிஸ் காதலர் தினத்தை முன்னிட்டு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
உலகெங்கும் நேற்று முன் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட காதலர் தினம் வாடிகனிலும் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது.

இதனையொட்டி புனித பீட்டர் சதுக்கத்தில் திருமணம் நிச்சயிக்கப் பட்ட இளம் ஜோடிகளுக்கு போப் பிரான்சிஸ் சிறப்பு தரிசனம் அளித்தார்.
இந்நிலையில் அன்றைய தினத்தை முன்னிட்டு போப் பிரான்ஸிஸ் மணவாழ்வை மகிழ்ச்சியுடன் நடத்துவதற்கு பல்வேறு அறிவுறைகளை வழங்கினார்.

· ப்ளீஸ், சாரி, தாங்க்ஸ் ஆகிய வார்த்தைகளை தாரகமந்திரமாக பயன்படுத்த வேண்டும்.
· ஒவ்வொரு நாளின் இறுதியிலும் மனதில் அமைதியை ஏற்படுத்தாமல் படுக்கைக்குச் செல்லக்கூடாது .ஏனெனில் அது மன இறுக்கத்திற்கும், தளர்விற்கும் வழிவகுப்பது மட்டுமல்லாமல் அடுத்த நாளும் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கும்.

· குற்றமில்லாத குடும்பம் ஒன்றும் இல்லை என்பதால் குற்றம் காண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
மேலும் போபிற்கு புனித பீட்டர் சதுக்கத்தில் அமோக வறவேற்பு கிடைத்ததால் உள் அரங்கத்தில் நடத்தப்படவிருந்த இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என வாட்டிகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


புதன், 12 பிப்ரவரி, 2014

கன்னி மேரி சிலை அழுகிறது! (காணோளி)

இஸ்ரேலில் கன்னி மேரி சிலை ஒன்று பேசியதாக வந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனான் எல்லையை ஒட்டியுள்ள டர்ஷிஹா என்ற சிறிய நகரத்தில் ஒசாமா கௌரி என்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள கன்னி மேரி சிலை சமீபகாலங்களாக பளபளப்புடன் இருப்பதை, மனைவி அமிரா பார்த்துள்ளார். இதனை சுத்தம் செய்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் அந்த சிலையில் எண்ணெய்தன்மை தென்பட்டுள்ளது. அத்துடன் கன்னி மேரி சிலை தன்னிடம் பேசியதாகவும், தன்னை பயப்பட வேண்டாமென்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல் வெளியே கசிந்துவிடவே, நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பார்வையிடுகின்றனர். மேலும் சிலையின் கன்னத்தில் ஒரு கண்ணீர்துளி திரண்டு வெளிப்பட்டதாகவும், கடந்த வாரம் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் வந்து இந்த சிலையை பார்த்து சென்றுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


செவ்வாய், 28 ஜனவரி, 2014

போப் ஆண்டவரின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட புனிதப் பொருள் திருட்டு

போப் ஆண்டவர் 2ம் ஜான் பாலின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட புனிதத் துண்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 1978ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை போப் ஆண்டவராக இருந்தவர் 2ம் ஜான் பால். இவரது ரத்தத்தில் நனைக்கப்பட்ட 'புனித துணித் துண்டு’ ஒன்று பெட்டியில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இது மத்திய இத்தாலியின் அப்ரூஸோவில் உள்ள சிறிய தேவாலயம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 25ம் திகதியன்று

 தேவாலயத்தை உடைத்து அந்த புனிதப் பொருளை எடுத்துச் சென்று உள்ளனர். இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். போலந்து நாட்டை சேர்ந்த முன்னாள் போப் ஆண்ட்வர் ஜான் பால் அமைதியை விரும்பும் போது எல்லாம் இந்த மலைப்பிரதேசத்தில் சென்று ஒய்வெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.